Monday, March 22, 2021

 

காத்தான்குடி அஷ்ஷுஹதா வித்தியாலய பாராட்டு விழா 










கடந்த 19.03.2021 வெள்ளிக்கிழமையன்று காத்தான்குடி கோட்ட  அஷ்ஷுஹதா வித்தியாலயத்தில் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பாராட்டு நிகழ்வும், இப்பாடசாலையில் எட்டு வருடங்களாக கற்பித்து தற்போது ஓய்வு பெற்றுள்ள மௌலவி யு.எல்.எம்.ஹாரித் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வும், மற்றும் இம்முறை பட்டதாரி பயிலுனர்களாக இப்பாடசாலைக்கு நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களை வரவேற்கும் நிழ்வும் வித்தியாலய அதிபர் எம்.ஸி.எம்.முனீர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இதில் பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தமையோடு , இந்நிகழ்வில் அதிதிகளாக காத்தான்குடி கோட்டக்கல்விப் பணிப்பாளர் கலாவுதீன், மற்றும் ஆரம்பக் கல்வி ஆசிரிய ஆலோசகர் அலாவுதீன் மற்றும் உளவளத்துணை தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.றிஸ்வி ஆகியோகர் கலந்து கொண்டனர்.

மாணவர்களுக்கான கௌரவிப்பு நகழ்வும், மற்றும் ஆசிர்யர் பாராட்டு நிகழ்வுகளும் கலந்து கொண்டோரையும் நாம் மேலே காணலாம்.

  தேசிய கல்வி நிறுவகத்தின் பாரம்பரிய மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் ஊடாக அரபு மொழிப் பாடத்திற்கான மொடியூல் தயாரிக்கும் செயற்திட்டத்திட...