மட்டக்களப்பு மாவட்ட செயலக அனுசரணையில் தொழில் வழிகாட்டல் செயலமர்வு - 2018
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் அனுசரணையில் சமூக வலுவூட்டல் அமைச்சின் வழிகாட்டலில் 02.05.2018 - 03.05.2018 வரை இருநாள் தொழில் வழிகாட்டல் செயலமர்வினை மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலகத்தின் ஏறாவூர் கோட்ட ஆசிரியர்களுக்கு சமூக வலூவூட்டல் அமைச்சின் மனித வலுவூட்டல் உத்தியோகத்தர்களினால் நடாத்தப்பட்டது.
இதில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.V.T..அஜ்மீர் (முகாமைத்துவம்) அவர்களும், மனித வள உத்தியோகத்தர்களான திருமதி.தெய்வேந்திர குமாரி (இணைப்பாளர்), திருமதி.மீனாம்பிகை மகேஸ்வரன், திரு.ரு.சுரேஸ், மட்டக்களப்பு மத்தி வலயத்தின் தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் திரு.M.B.M.சித்தீக் ஆகியோரும் வளவாளர்களாக கலந்துகொண்டனர்.
வளவாளர்களினால் ஆசிரியர்களுக்கு விரிவுரைகள் நடாத்தப்படுவதனையும், இதில் கலந்துகொண்டுள்ள பங்குபற்றுனர்களையும் நாம் மேலே காணலாம்.
No comments:
Post a Comment