Monday, January 11, 2021

 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் முன்பள்ளி உதவிக் கல்விப்பணிப்பாளர் SAC. கலீலூர் ரஹ்மான் அவர்களால் வழங்கிவைப்பு 



மட்டக்களப்பு மத்தி கல்வி வலய முன்பள்ளி உதவிக் கல்விப்பணிப்பாளர் அல்ஹாஜ் SAC. கலீலுர் ரஹ்மான் அவர்களின் முயற்சியினால் பௌமி பவுண்டேசனின் பங்களிப்புடனும் கலீல் ஹாஜியாரின் உதவியுடனும் மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. 

கல்குடா, ஏறாவூர் பிரதேசங்களில் உள்ள வறிய மாணவர்களின் கல்வி மேம்பாட்டை கருத்திற்கொண்டு இவ்வுதவிகள் வழங்கி வைக்கப்பட்டன. தொடர்ச்சியாக சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் உதவிக் கல்விப் பணிப்பாளர் அவர்களின் செயற்பாடுகள் பாராட்டுக்குரியதாகும். 

அதேவேளை, இந்த நெருக்கடியான மற்றும் பொருளாதார வறுமை நிலைமை காணப்படுகின்ற இவ்வேளையில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களிலுள்ள மாணவர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கு இவ்வுதவிகள் நேரடியாக வழங்கி வைக்கப்பட்டமை  சிறந்த  முன்னுதாரணமாகும்.

No comments:

Post a Comment

  தேசிய கல்வி நிறுவகத்தின் பாரம்பரிய மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் ஊடாக அரபு மொழிப் பாடத்திற்கான மொடியூல் தயாரிக்கும் செயற்திட்டத்திட...