Thursday, February 22, 2018



பொ / தி / கட்டுவன்வில முஸ்லிம் கணிஸ்ட வித்தியாலய மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு - 2018





நவீன உலகின் தேவைகளுக்கேற்ப எமது தொழிற்துறைகள் எவ்வாறு தெரிவு செய்து கொள்ளலாம்?. இன்றைய தொழிற்துறைகள் என்ன? இத்தொழிற்துறைகளை இலங்கையில் எந்தெந்த நிறுவனங்கள் வழங்குகின்றன என்ற வழிகாட்டல் கருத்தரங்கொன்று பொலன்னறுவை திம்புலாகல கட்டுவன்வில முஸ்லிம்கணிஸ்ட வித்தியாலய க.பொ.சா.தர பாடசாலை மாணவர்களுக்கு காத்தான்குடி ஆசிரிய மத்திய நிலைய தொழில் வழிகாட்டல் அதிகாரி ஏ.எல்.எம்.றிஸ்வி அவர்களால் 22.02.2018 அன்று வழங்கப்பட்டது. இச்செயலமர்வினை இப்பாடசாலையின் தற்போதை அதிபரான திரு.S.M.ராஸிக் பரீட் மற்றும்  விஞ்ஞானப்பாடம் கற்பிக்கும் ஆசிரியரான திரு.A.C..சஜாத் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வில் இப்பாடசாலையின் முன்னால் அதிபரான திரு.எம்.முகம்மட் தம்பி அவர்களும் கலந்துகொண்டார்கள்.

இதன் போது இதில் வளவாளராக கலந்துகொண்ட திரு.ஏ.எல்.எம்.றிஸ்வி அவர்கள் மாணவர்களுக்கு  தெளிவுரை வழங்குவதனையும், இப்பாடசாலையின் தற்போதைய அதிபர், முன்னால் அதிபர் ஆசிரியர் ஆகியோரையும், மற்றும் இதில்   பங்கேற்ற மாணவர்களையும் நாம்  மேலே காணலாம்.

Monday, February 12, 2018


கற்றல் விருத்தியில் பிள்ளைநேயப் பாடசாலைகளின் பங்களிப்பு

 

சமகால கல்விச் செல்நெறியானது தேர்ச்சிமையம் , மாணவர்மையம்    என்ற சொற்பிரயோகத்துடனும். தரமான கல்வி ,விழுமியக் கல்வி, வாழ்வதற்கான கல்வி என்ற கோட்பாடுகளுடனும் வளர்ச்சி பெற்றுச் செல்கிறது. மாணவகளின் உரிமைகள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தும் அரசு நிறுவனங்கள் பாடசாலைகள் என்பன மாணவர்கள் எவ்விதம் கையாளப்படல்வேண்டும் என்ற கரிசனை ஒன்றை எம்மனைவருக்கும் உணர்த்துகின்றன. சமுதாயம் ஒன்றின் எழுச்சி குறித்து விழிப்புடன் செயற்படும் அனைவரும் இம்மாணவர்கள் குறித்தும் அவர்களின் கற்றல் செயற்பாடு குறித்தும் கவனம் செலுத்துவது இயல்பானதாகும். இவ்விதம் மாணவர்மீதான கரிசனையும் எதிர்பார்ப்பும் எதிகால உலகொன்றின் இருப்பு தொடர்பானதும் நிலைத்திருத்தல் தொடர்பானதுமான சிந்தனையின் பிரதான வெளிப்பாடாகும்.
சிறுவர் நேயம்  தொடர்பான விழிப்புணர்வு எமது நாட்டிலும் (இலங்கையில்) தாக்கத்தினை உண்டுபண்ணியுள்ளது. சிறுவர்மீதான வன்கொடுமைகள்அநீதிகள் துஷ்பிரயோகங்கள் குறித்து தகவல் தொடர்பாடல் ஊடகங்கள் உண்மைகளை வெளிக்கொணர்ந்தவண்ணமுள்ளன. இவை சிறுவர் காப்பாற்றப்படவேண்டியதன் முக்கியத்துவத்தை எமக்கு உணர்த்துகின்றது. இந்நிலையின் ஒரு பாதுகாப்பான ஏற்பாடாகவே அரசு சிறுவர் நேய அணுகுமுறைகளை பாடசாலைகளில் மேற்கொள்வதற்கான விசேட வழிமுறைகளையும் பொறிமுறைகளையும் ஏற்பாடக்கியுள்ளது.

சிறுவர் உரிமைகள் குறித்து சொல்லப்படும் சாசனங்கள்.

(சிறுவர் உரிமை பற்றிய சமவாயம் - UN convention on the right of the child - 1989)

சிறுவர் உரிiகைள் சாசனத்தில்  42 உறுப்புரைகளில் சிறுவர் உரிமைகள் குறித்து விபரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில இங்கு தரப்படுகின்றன.
சிறுவர்கள் எனப்படுவோர் 18 வயதிற்குட்பட்டோர் ஆவர்.(உறுப்புரை 1)
பாகுபாடு காட்டாமை. (உறுப்புரை 2)
பிள்ளைகளின் சிற்ந்த நலன் (உறுப்புரை 3)
உயிர்வாழ்வதற்கான உரிமை. (உறுப்புரை 6)
பெற்றோர்களுடன் சேர்ந்து வாழ்வதற்கான உரிமை(உறுப்புரை 9)
கருத்து தெரிவிப்பதற்கான உரிமை (உறுப்புரை 13) 
சிந்தனைää மனச்சாட்சிää மதம் என்பதற்கான உரிமை (உறுப்புரை 14) 
ஒருங்கு சேர்வதற்கான உரிமை (உறுப்புரை 15) 
அந்தரங்கத்திற்கான உரிமை (உறுப்புரை 16) 
உடல் மற்றும் உள பாதுகாப்பு மற்றும் புறக்கணிப்பு என்பவற்றிலிருந்து     
         பாதுகாத்தல் (உறுப்புரை 19) 
இயலாமையுடைய பிள்ளைகள் ää விசேட பராமரிப்பு. கல்வி மற்றும்
         பயிற்சி பெறும் உரிமையுடையவர்கள் (உறுப்புரை 23) 
சுகாதராரம் மற்றும் வைத்திய உதவியைபெறும் உரிமை (உறுப்புரை 24)
கல்விக்கான உரிமை (உறுப்புரை 28) 
ஓய்வு பொழுதுபோக்கு என்பவற்றுக்கான உரிமை (உறுப்புரை 31)
ஆரோக்கியம்ää கல்வி மற்றும் வளர்ச்சி என்பவைகளைப் பாதிக்கும் 
         வேலைகளில் அமர்த்துவதிலிருந்து பாதுகாப்பு(உறுப்புரை 32) 
தீங்கான வேலைகளில் அமர்த்துவதிலிருந்தான பாதுகாப்பு (உறுப்புரை 33) 
பாலியல் சுரண்டலில்; இருந்து பாதுகாப்பு (உறுப்புரை 34) 
;திரைவதையில் இருந்தான பாதுகாப்பு (உறுப்புரை 37) 
போரில் ஈடுபடுவதிலில் இருந்தான பாதுகாப்பு (உறுப்புரை 38) 

மேற்குறித்த உரிமைகளைக் கொண்டு பாடசாலைகளுக்கு வரும் மாணவர்களுக்கு  வழங்கவேண்டிய கல்வியானது நல்ல நடத்தை மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு சிறுவர் நேய அணுகுமுறைகளை  காடைப்பிடித்தல் வேண்டும். சரீர ரீதியானää உளரீதியான தண்டனைகளை ஆசிரியரோ அதிபரோ  பாடாசலைகளில் வழங்க முடியாது. மேலும் கட்டாயக் கல்வி வயதெல்லை 14 ஆகஇருக்கும் நிலையில் பிள்ளைகளை வேலைக்கமர்துதல்ää பிச்சை எடுக்கவைத்தல் ஆபாசா காட்சிகளைப் பார்க்கச்செய்தல்ää ஆபாசப் பட்ங்களை எடுப்பதுää கொடுமைப்படுத்துவது போன்ற விடயங்களை அறியும் பட்சத்தில் அதற்கெதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வது கல்விச் சமூகத்தின் கட்டாக பணியாகும்.

சிறுவர் நேயப் பாடசாலைகள் 

இல்கையில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் சிறுவர் நேயப் பாடாசலைகளாகும்.சிறுவர் நேயப் பாடசாலை என்ற பதம் குறித்து நிற்பதாவது சர்வதேச சிறுவர் உரிமைகள் பிரகடனத்தின்படி “சகல பிள்ளைகளது சகல உரிமைகளையும் செயல் ரீதியல் நிறைவேற்றும் பாடசாலையாகும்”என்பதாகும் இதன் அடிப்பiயில் யுனிசேவினால் வழங்கப்பட்ட கீழ்குறிப்பிடப்படும் ஆறு நியமங்களை அடிப்படையாகக்கொண்டு பாடசாலைகளில் கல்வி முறை செயற்படுத்தப்படல் வெண்டும் என்று சொல்லப்படுகின்றது.

1. உரிமைகளை அடிப்படையாகக்கொண்ட உட்படுத்தல்.
2. ஆண்ääபெண் சமூகவியல்புகளில் கவனம் செலுத்துதல்.
3. பிள்ளைகளின் கற்றல் பேறுகளை விருத்திசெய்தல்.
4. பிள்ளைகளின் ஆரோக்கியத்தையம் கவனிப்பையும் பாதுகாப்பையும் 
        உறுதிப்படுத்தல்.
5. மாணவர்ää குடும்பம் மற்றும் சமூகத்தின் உயிரோட்டமான பங்களிப்பு
6. சிறுவர் நேயக்கொள்கைகள்ääமுறைமைகள்ää பரிச்சயங்கள்
         ஒழுங்குவிதிகள் ஊடாக உதவிபெறல்.
மேற்குறித்த விடங்களில் அரசு அதிக அக்கறைகொண்டுள்ளதுடன் அவற்றிற்கான வழிவகைகளையும் பாடசாலைகளுக் வழங்கிவருகின்றது.
1. உரிமைகளை அடிப்படையாகக்கொண்ட உட்படுத்தல்.
உட்படுத்தல் கல்வி (ஐnஉடரளiஎந நுனரஉயவழைn)
மாணவர்களை வரவளைக்கும் குழு
கட்டாயக் கல்விக்குழு
பாடசாலை அபிவிருத்திக்குழு
பாடசாலைப் பழையமாணவர் சங்கம்.
பாடசாலை முகாமைத்துவக்குழு
பாடசாலை ஒழுக்காற்றுக்குழு
சிறுவர் விளையாட்டு முற்றம்.
சிறுவர் பூங்கா
பாடசாலை வகுப்பறைக் கவின்நிலைபேணல்.முதலான கருமங்கள் 
        பாடாசலை நிர்வாக்த்தினால் மேற்கொள்ளப்படுகின்றன.


2. ஆண்ääபெண் சமூகவியல்புகளில் கவனம் செலுத்துதல்.
பாடாசலைக்கு அனுமதித்தலில் சமவாய்ப் வழங்கப்படுகின்றது.
இணைபாடவிதானச் செயற்பாடுகளில் பால்நிலை வேறுபாடு 
         காட்டப்படாமை
ஆண்கள் பெற்கள் என்ற  வேறுபாட்டுக்கமைவான சீருடை
          வழங்கப்படுகின்றது.
தனியான மலääசல கூட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
விளையாட்டு நிகழ்வுகள்ää மற்றும் போட்டிகளில் பால்நிலை சமத்துவம் 
          பேண்படுகின்றது.
பாடசாலைப் பொதீக வளங்களைக் கையாள்வதில் சமத்துவம் 
         பேணப்படுகின்றது.

3. பிள்ளைகளின் கற்றல் பேறுகளை விருத்திசெய்தல்.
கற்றலுக்கு உதவுவதற்காக பயிற்றப்பட்ட ஆசிரியர்களுஇலவச 
         பாடநூல்களும். சீருடைகளும்.  வகுப்பறை வசதிகளும்.
       விளையாட்டிடங்களும் வழங்கப்பட்டுள்ளன .
வபுப்பறைச் சூழுல் உட்படுத்தலுக்கேற்றவாறு அமைந்துள்ளன.
ஜனநாயக ரீதியான கற்பித்தல் முறைகள் இடம்பெறுகின்றன.
பிரசேச சூழல்ää பண்பாடு போன்றவை பற்றிய அறிவைப் பெற்றுக் 
        கொடுப்பதற்கு பாடசாலைக்கலைத்திட்டம் பொருத்தமாக 
          இசைவாக்கப்பட்டுள்ளது.
வழங்கப்பட்ட வாய்ப்புக்களினூடாக சுய அர்வத்துடன் ஆசிரியர்கள் தமது 
         திறன்களைத் தொடர்ச்சியாக விருத்தி செய்துகொள்வார்கள்.
கற்பித்தலின்போது மாணவர்மைய கற்பித்தல்முறை இடம்பெறும்.
அத்தியாவசியக் கற்றல் தேர்ச்சிகள் முறையாக கணிப்பீடு 
         செய்யப்படுகின்றன. 
சகல மாவர்களும் தேர்ச்சியடையத்தக்க பயனுள்ள முயற்சிகள் 
          மேற்கொள்ளப்படுகின்றன.

4. பிள்ளைகளின் ஆரோக்கியத்தையம் கவனிப்பையும் பாதுகாப்பையும் 
        உறுதிப்படுத்தல்.
சுகாதாரம்ää கவனிப்புää பாதுகாப்புத் தொர்பாக பாடசாலை மட்டத்திலான 
        கொள்ளைகள் உள்ளன.
உணவுää நீர் கழிவக்றறல் வசதிகளோடு பாடசாலைச்சூழல் பாதுகாப்பாகக் 
        பேணிவரப்படுகின்றது.
மாணவர்களுக்கு தேர்ச்சிமையச் சுகாதாரக் கல்வி நடைமுறைப் 
        படுத்தப்படுகின்றன.
துன்புறுத்தல்ää துஷ்பிரயோகங்களில் இருந்து பாதுகாப்பதற்கான 
        ஏற்பாடுகள் உள்ளன.
அனர்த்த முகாமைத்துவ திட்டமிடல் உள்ளன. அது நடைமுறைப் 
          படுத்தப்படுகின்றது.

5. மாணவர்ää குடும்பம் மற்றும் சமூகத்தின் உயிரோட்டமான பங்களிப்பு
பிள்ளைகளின் பெற்றோர்கள்ää சமூகத்தினர்ää நலன்விரும்பிகளின் 
        பயனுள்ள பங்களிப்பு பெறப்படுகின்றது
பாடசாலை அபிவிருத்தி திட்டம்  மேற்கொள்ளப்படுகின்றது. 
கிரமா அலுவலகர். சமூகத்தலைவர்கள்ää பிரதேச அலுவலகத்தினர். 
        காவல்துறையினர் பிள்ளைகளைப் பாசாலைக்கு வருவதற்கான 
        ஒத்துளைப்பிளை வழங்குகின்றனர்.
பாடசாலைன் அனைத்து நிகழ்வுகளிலும் பெற்றோர் நலன்விரும்பிகள் 
       பங்களாளிகளாக உள்ளனர்.
போக்குவரத்து துறை மாணவர்களுக்கு கட்டணக்குறைப்பு செய்துள்ளது.
இலவச சுகாதார மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றன.


6. சிறுவர் நேயக்கொள்கைகள்ääமுறைமைகள்ää பரிச்சயங்கள் 
         ஒழுங்குவிதிகள் ஊடாக உதவிபெறல்.
அரச கொள்கைகளும்ää சட்ட திட்டங்களும்ää அவற்றை 
         நடைமுறைப்படுத்துதலும் சிறுவர் நேயப்    பாடசாலை அபிவிருத்திக்கு 
        உதவும்.
குறித்த சகல அரச நிறுவனங்களுக்கிடையில் சகல நிலைகளிலும் 
          பயனுள்ள இணைப்புக் காணப்படும்.
நிதி வளங்கள் பல்வேறு நிலைகளிலும் பொருத்தமாகப் 
          பயன்படுத்தப்படும்.
சகல நிலைகளிலும் தரமான தொழில்நுட்ப உதவித் தொகுதிகள் 
         காணப்படும்.
கலைத்திட்டத்திலும் பாடநூல்களிலும்ää ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டிகளிலும் சிறுவர் நேயக் கோட்பாடு அடங்கியிருக்கும். 
இச்சிறுவர் நேய அணுகுமுறையைப் பேணுகின்ற தன்மையானது மாணவர் கல்வி அபிவிருத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. உளவியல் ரீதியானதும்ää உரிமையை அடிப்படையாகக்கொண்டதும்ää உட்படுத்தலை மையமாகக் கொண்டதுமான ஒரு கற்பித்தல் நடவடிக்கை மாணவர்களுக்கு கற்றலில் ஆர்வத்தை உண்டுபண்ணுவதுடன் அறிவியல் வளர்சிக்கும் ஆளுமை விருத்திக்கும் ஊக்கியாக உள்ளது. 

இலங்கைக் கல்வி முறைமை இறுதிலில் பரீட்சை மையமானதாகையால் க.பொ.த.(சா.த)ääக.பொ.த.(உ.த) புள்ளிப்பெறுபேறுகளில் அதிக மதிப்பெண்களை எடுக்கவைக்கிறது. நவீன இலத்திரனியல் கருவிகளின் பயன்பாடு கற்றல் கற்பித்தல் அணுகுமுறைகளில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றவகையில் கல்வித்தர மேம்பாடு என்பது சாத்தியமானதாகின்றது. இலங்கை மக்களின் கல்வி அறிவு  வீதம்ää வாழ்க்கைத்தர மேம்பாடுää சுகாதாரமேம்பாடு முதலானவைகள் இத்தகைய பிள்ளை மையக் கற்றல் நடவடிக்கையால் சாத்தியமாகின்றது. எனவே சிறுவர் நேயப் பாடசாலைகள் பல நன்மைகளை கல்வித்துறைக்கு ஏற்படுத்துகின்றன.
சிறுவர் நேயப் பாடசாலைகளால் கிடைக்கும் நன்மைகள்.
மாணவர்கள் தமது தனிப்பட்ட திறன்களையும் ஆளுமைகளையும் உயர்ந்தபட்சமாக வெளிப்படுத்தக்தக்க சூழலை இப்பாடசாலைகள் வழங்குகின்றன.
ஆண்களைப் பெண்களும்  பெண்களை ஆண்களும் சமத்துவத்தினூடு மதிக்கவேண்டிய உரிமையை கற்பதற்கான வசதியை ஏற்படுத்திக்கொடுக்கின்றது.
பாடசாலைகளில் இருக்கின்ற  சட்டத்தையும்ää ஒழுங்கையும் மதிக்கின்ற தன்மையை வழங்குகிறது.
பாடசாலைபோன்று வெளிஉலகில் இருக்கின்ற சட்டதிட்டங்களை மதிக்கின்ற கட்டுப்படுகின்ற கற்கையை வழங்குகிறது.
இடைவிலகும் மாணவரகளின் விகிதாசாரத்தைக் குறைக்கின்றது.
தவறான பழக்கவழக்கங்களில் ஈடுபடவதனால் ஏற்படும் பாதிப்புக்களை தெளிவுபடுத்துகின்றது.
ஆசிரியர்களுடனான நட்புறவை வளர்க்கின்றது.
பல்வேறு விதமான இடைவினைத்தொடர்புகளை ஏற்படுத்துகின்றது.
பாடசாலையானது ஒரு களிப்பிற்குரிய இடமாக மாற்றுகின்றது.
ஒன்றுபட்ட சமூகமொன்றைக் கட்டியெழுப்புகின்றது.
கலாசார விழுமியங்களைக் கற்று;ககொடுக்கின்றது.
இவ்விதம் எண்ணற்ற நன்மைகளை சிறுவர்நேயப் பாடசாலைகள் வழங்குவதால் மாணவர்களின் கல்வி அபிவிருத்தி மேம்பட உதவுகின்றது. 

Thursday, February 8, 2018

ஞாபகத்தை அதிகரிக்கும் வழிகள்

ஞாபகத்தை அதிகரிக்கும் வழிகள்


ஞாபகம் ஒரு வியாதி, மறதி ஒரு வரம் என்று சொல்வார்கள் , ஆனால் நம் குழந்தை படித்தததை எல்லாம் மறக்கும் போது மறதி ஒரு சாபம் போல நமக்கு தோன்றும்.

ஞாபகம் குறித்து சில தகவல்கள்




நாம் பார்க்கும், கேட்க்கும், உணரும், சுவைக்கும், முகரும் அனைத்துமே நமது ஞாபகங்கள் ஆகும். இது முதலில் குறைந்த நேரமே மனதில் இருக்கும் (சென்சரி மெமரி ). உடனே மறந்து விடும். இந்த சென்சரி மெமரியில் நாம் முழு கவனத்தை செலுத்தி ஆழ்ந்து கவனித்தால் அது ஷார்ட் டெர்ம் மெமரி ஆக பதிவாகும். இதுவும் சில மணித்துளிகளுக்கு மட்டும் இருக்கும். ஷார்ட் டெர்ம் மெமரி - ஐ திரும்ப திரும்ப செய்யும்போது அது நாள்பட்ட ஞாபக சக்தியாக மாறும்.
எனவே ஞாபக சக்திக்கு மிகவும் முக்கிமானது இரண்டு :
1. ஆர்வம் மற்றும் கவனம்
2. திரும்ப திரும்ப செய்தல்
மேலும் நாள்பட்ட ஞாபகம் கூட மறக்க வாய்ப்பு உள்ளது, இதுவும் நல்லது தான். சில சமயம் வாழ் நாள் முழுதும் நினைவில் இருக்கும்.

நாள் பட்ட ஞாபகத்தின் இரண்டு வகைகள்
explicit என்பது கொஞ்சம் யோசித்தால் நினைவுக்குக் கொண்டுவர முடியும், implicit என்பது யோசிக்க தேவை இல்லாமல் உடனே நினைவுக்குக் கொண்டு வருதல்.
நினைவுத் திறனை சிறு உதாரணம் கொண்டு விளக்கலாம்
மிதி வண்டி ஓட்ட பழகுதலை எடுத்துகொள்வோம், யாரோ ஓட்டுவதை நாம் பார்ப்பது – சென்சரி மெமரி முதன் முதல் ஓட்ட கற்று கொள்வது – ஷார்ட் டெர்ம் மெமரி தத்தி தத்தி ஓட்டுவது – ஷார்ட் டெர்ம் explicit மெமரி தயவே இல்லாமல் ஓட்டுவது -லாங் டெர்ம் implicit மெமரி (சாகும் வரை மறக்காது )

நினைவுத் திறனை அதிகரிக்கும் வழிகள்

1 . எதையும் தாய் மொழியிலேயே சிந்திக்க வேண்டும், நீங்கள் படிப்பது ஆங்கிலமோ, ஹிந்தியோ, பிரெஞ்சோ – உங்கள் தாய் மொழி என்னவோ அதில் சிந்தித்து மனதில் பதிய செய்ய வேண்டும்
2 . புரியாமல் எதையும் படிக்கக்கூடாது . ஒரு வரி புரிய ஒரு நாள் ஆனாலும் பரவாயில்லை.
3 . முழு கவனம் மிக அவசியம் .
4 . mnemonics வைத்து படிப்பது ஒரு கலை . அதை உங்கள் குழந்தைக்கு கற்றுக்கொடுங்கள் . உதரணம் NEWS – north, east, west, south
5 . படித்தவுடன் எழுதி பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் . ஹோம் வொர்க் என்ற பெயரில் கடமைக்கு எழுதும் சடங்கு பயனில்லை.
6 . படங்களுடன் கூடிய தகவல்கள் மனதில் பதியும். பட விளக்கங்களை திரும்பத் திரும்ப வரைந்து பார்க்க சொல்ல வேண்டும்
7 . நல்ல உறக்கம் அவசியம் . குறைந்தது 8 மணி நேர தூக்கம் கண்டிப்பாக தேவை
8 . இரவில் சீக்கிரம் தூங்கி அதிகாலை படிக்கும் படி சொல்ல வேண்டும்.
9 . தூங்க போகும் முன் அன்று படித்த அனைத்தையும் ஒரு முறை மேலோட்டமாக நினைவு படுத்திப் பார்க்க வேண்டும். அப்படி செய்யும் போது நாம் தூங்கினாலும் நம் மூளையின் சில மூலைகள் விழிப்புடன் இருந்து தகவல்களை ஷார்ட் டெர்ம் மெமரியில் இருந்து லாங் டெர்ம் மெமரியில் பதிவு செய்து கொண்டு இருக்கும். இது மிக முக்கியமான பயிற்சி ஆகும் .
10 . மாவு சத்து உள்ள உணவுகள் மந்த நிலையை ஏற்படுத்தும், எனவே புரதம் நிறைந்த எளிதில் செரிக்கும் உணவை சேர்த்துக்கொள்வது நல்லது.

Tuesday, February 6, 2018



குழந்தைப்பருவ ஆளுமை வளர்ச்சியில் முன்பள்ளி கற்றலின் அவசியம் ஏன் ?


நோக்கம்
ஒரு நாட்டின் முன்னேற்றத்தை நிர்ணயிப்பதில் வகுப்பறை முக்கிய பங்கு ஏற்கிறது. ஒரு தனி மனிதனின் வாழ்க்கையில் ஒரு சில நிலைகளில் எவ்வித காரணமில்லாமல் கற்றல் விகிதமானது அதன் உச்ச நிலையில் காணப்படுகிறது. இந்நிலையில் மனதில் தக்க வைத்துக் கொள்ளும் கருத்துக்களை மற்ற எந்த நேரத்திலும் அல்லது நிலைகளிலும் முடியாமல் போகிறது. எனவே இந்த (வேளை) காலம் உணர்ச்சிமிக்க காலம் (sensitive period) அல்லது ஆராயும் பருவம் எனப்படுகிறது. இப்பருவத்தில் தான் குழந்தைக்குத் தன் திறமைகளை வளர்த்துக் கொள்ள மற்றைய காலங்களை விட அதிகப்படியான செயலாற்றும் திறன் உச்சநிலையிலுள்ளது.
ஒரு குழந்தைக்கு எத்தகைய சாதகமான சுற்றுப்புற சூழ்நிலையிலிருந்தாலும் அக்குழந்தை குறிப்பிட்டமுதிர்ச்சிநிலையை அடையும் வரை அதனால் கற்க இயலாது. முறையான நல்ல வளர்ச்சி ஏற்படுவதற்கு நல்ல சாதகமான சூழ்நிலை அத்தியாவசியமான ஒன்றாகிறது. நல்ல சூழ்நிலை என்பது குழந்தைக்குத் தூண்டுகோலாகவும், நல்ல (உடன்பாடான) உறுதியான அனுபவங்களை கொடுக்கக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும். அத்தகைய சூழலே குழந்தைக்கு சலிப்பினைப் போக்கி தன்னகத்தே மறைந்துள்ள திறமைகளையும் தனித்தன்மையையும், விருப்பங்களையும் வெளிப்படுத்த உதவுகிறது. குழந்தை வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் இரண்டும் ஒரு தொடர்ச்சியான நிகழ்வாக இருப்பதால் கற்றலும் முதிர்வடைதலும் அதனைப் பொறுத்தே அமைகிறது. வெறுமையான (வெற்றிடத்தில்) சூழ்நிலையில் முறையான கற்றல்நிகழாது. ஏனெனில் அதற்குத் தூண்டுதலான சூழ்நிலையும் இனிமையான அனுபவங்களும் இருந்தால் தான் குழந்தை உலகினைப் பற்றி ஆராய உதவும்.
குழந்தைகளின் ஒன்றிணைந்த ஆளுமை வளாச்சி
உடல் இயக்க வளர்ச்சிஎல்லாக் குழந்தைகளுக்கும் கற்பதற்கு உரிமை உண்டு. ஒவ்வொரு குழந்தைக்கும் அதன் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை முறையான வழியில் அடைய உதவுதல் வேண்டும். குழந்தைகளின் ஆரம்ப கால பருவங்களைப் பற்றி கல்வியாளர்கள் அதிக அக்கறை கொண்டு கவனம் செலுத்தினார்கள். குழந்தையின் வளர்ச்சியில், முதல் ஆறு வருடங்கள் முத்திரை பதிக்கக்கூடியவையாக உள்ளது. ஏனெனில் இந்தப் பருவத்தில் தான் அடிப்படை நீதி, உடல், சமூக, மன எழுச்சி, மொழி மற்றும் கலை வளர்ச்சிக்கு வித்திடப்படுகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் ஒருங்கிணைந்த வளர்ச்சியைக் கீழ் வரும் முறையில் விளக்கலாம்.
  • குழந்தையின் முழுமையான வளர்ச்சி
  • கலை வளர்ச்சி
இந்நிலையானது குழந்தைப்பருவத்தில் மிகமுக்கியமான ஒன்றாக உள்ளது. இப்பருவத்தில் தான் குழந்தையின் எண்ணங்கள், ஆர்வங்கள், நேயங்கள் போன்றவை வளர்ச்சியடைகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின்பால் மிகுந்த அன்பு கொண்டிருந்தாலும் தங்கள் குழந்தைகளை வழிநடத்திச் செல்லவும், பயிற்சியளிக்கவும் போதுமான திறமையுடையவர்களாய் இருப்பதில்லை. அதைப்பற்றிய அறிவையுடையவர்களும் வறுமையால் வாடுவதாலும் அல்லது நவீன கால வாழ்க்கை முறையாலும் நேரமின்மையால் துன்பப்படுகின்றனர். சமுதாய வாழ்வில் ஏற்படும் மாற்றங்களாலும், தொழில் வளர்ச்சி அடைவதாலும் தற்போது குழந்தைகளின்பால் அதிக கவனம் செலுத்துதல் அவசியமாகிறது. நல்ல தரமான பால்வாடிகள், நர்சரி பள்ளிகள் மற்றும் முன் பருவப் பள்ளிகள் தொடங்கினால் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு உதவும். பள்ளிப் பருவக் கல்வியானது குழந்தைகளின் ஆரோக்கியமான மனம் மற்றும் மன எழுச்சி வளர்ச்சிக்கு முக்கிய தேவையான ஒன்றாகிறது.

முன்பள்ளியின் (Preschool) அவசியம்

  • அகராதிப்படி குழந்தைக்கு முன்பள்ளி என்பது ஆரம்ப நிலை கல்விக்கான ஒரு நிறுவனம். பெற்றோர்களுக்கு அது ஒரு பொதுவான இடம். அதில் ஆசிரியரின் தலைமையில் குழந்தைகள் கூடி, மகிழ்ந்து விளையாடி தங்கள் நேரத்தை ஒன்றாகக் கழிக்கிறார்கள்.
  • முன்பள்ளி முறையான கல்வி பயிலும் ஒரு இடமல்ல. அது குழந்தைகள் முதன்முதலாக தங்கள் சுதந்திரத்தை (அனுபவிக்கும்) உணரும் ஒரு இடமாகும். இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு செல்வதால் குழந்தைகளின் வாழ்க்கையில் முன்பள்ளி தவிர்க்க முடியாத ஒரு அம்சமாக உள்ளது. குழந்தைகளின் சுதந்திரத்தைப் பற்றிப் பேசும் போது குழந்தைகளை அவர்களது பெற்றோரிடமிருந்து சில மணி நேரங்களுக்குப் பிரித்து வைப்பதன் மூலம் அவர்களுக்கு பிரிவுத்துயர் ஏற்படாமல் தவிர்க்க முடிகிறது.
  • இப்பள்ளிகளில் முன்பள்ளியின் அனைத்து அடிப்படை கற்றல் முறைகளிலும் பயிற்சிக்கப்படுவதாலும் வெளிப்படுத்துவதாலும் அவர்களுக்கு சுதந்திர உணர்வு விரைவாக ஏற்படுகிறது.இப்பள்ளியில் செய்யப்படும் சில செயல்முறைகள் குழந்தைகளுக்கு தன்னிலை உணர்த்தும் சில செயல்களான தானே உண்ணுதல், உடையணிந்து கொள்ளுதல், சுத்தத்தைப் பராமரித்தல், போன்ற அடிப்படை செயல்கள் உருவாக உதவுகிறது.
  • இதைப் போன்ற பள்ளியில் ஏற்படும் கற்றல் அனுபவங்கள் குழந்தைகளுக்கு அடிப்படைப் பண்புகளான, வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்ளுதல், தங்கள் உணவு மற்றும் விளையாட்டுப் பொருட்களை பகிர்ந்து கொள்ளுதல், தங்கள் உடைமைகளைப் பாதுகாத்தல் போன்றவை ஏற்படுத்த உதவுகிறது. தங்கள் வயதை ஒத்த மற்ற குழந்தைகளோடு கலந்துரையாடவும், புதிய வார்த்தைகளைக் கற்பதன் மூலம் விரைவாக மொழி வளர்ச்சியை ஏற்படுத்திக் கொள்ளவும் உதவுகிறது.
  • விளையாட்டுப் பள்ளிகள் குழந்தைகளை பெரிய பள்ளிகளுக்குச் செல்வதற்குரிய தன்னம்பிக்கை மற்றும் தனித்தன்மையை வளர்த்து அவர்களைத் தயார்படுத்துகிறது.
  • குழந்தை ஆசிரியர் விகிதம் சரியாக பேணப்பட்டு வரும் நல்ல முன்பள்ளியில் விளையாட்டிற்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு அதன் அவசியம் உணரப்படுகிறது. அறியாக் குழந்தைகளை வழிநடத்திச் செல்லும் ஒரு நல்ல வெளிச்சமுடைய விளக்காக முன்பள்ளி இருப்பதால் அது சிறந்த ஒன்றாக இருத்தல் அவசியம்.

முன்பள்ளியின் குறிக்கோள்கள்

  • குழந்தைகளுக்கு நல்ல உடல் வளர்ச்சி, மற்றும் தசை திறன் ஒருங்கிணைப்பு மற்றும் இயக்கத்திறன் வளர்ச்சியை ஏற்படுத்துதல்.
  • குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியமான சுகாதார பழக்கங்களை ஏற்படுத்தவும், உணவு உண்ணுதல், கழிப்பறை பழக்கங்கள், கை கழுவுதல், சுத்தப்படுத்துதல், நன்கு உடையணிதல் போன்ற தனிப்பட்ட இணக்கங்களை ஏற்படுத்த உதவும் செயல்களை செய்யவும் உதவுதல்.
  • குழந்தைகள் தங்கள் மன உணர்வுகளை முதிர்ச்சியான முறையில் வெளிப்படுத்தவும், உணர்ந்து கொள்ளவும், ஏற்றுக் கொள்ளவும், கட்டுப்படுத்தவும் வழிநடத்துதல்.
  • கலை உணர்வினை வெளிப்படுத்தும் தூண்டுகோலாக இருத்தல்.
  • தாங்கள் வாழும் உலகினைப் பற்றிப்புரிந்து கொள்ளவும், ஆராய்ச்சி செய்து கண்டறியவும், அவர்கள் அறிவு தாகத்தையும், ஆர்வத்தையும், தூண்டக்கூடிய சூழலை ஏற்படுத்துதல்.
  • குழந்தைகளின் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும், அவர்களின் எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் சரியான முறையில் உச்சரித்து வெளிப்படுத்த ஏதுவாக இருத்தல்.
  • முன்பள்ளியானது குழந்தைகளின் சரியான நேர்மையான எண்ணங்களான நம்பிக்கை, அன்பு, பாதுகாப்பு, சாதிக்கும் தன்மை, சகிப்புத் தன்மை, போன்றவற்றைக் கற்கவும் அவற்றை முறையான வழியில் வெளிப்படுத்த உதவும் செயல்களாக வரைதல், தோட்டமிடுதல் போன்ற செயல்களின் மூலமும் ஈடுபடுத்துதல்.
  • தங்கள் கலை உணர்வினை வெளிப்படுத்த சந்தர்ப்பம் அளித்துத் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தவும்,நிறங்கள், சமநிலை, இயற்கை அழகை ரசிக்க இன்ப சுற்றுலா அழைத்துச் செல்லுதல், அல்லது கலை அழகு மிக்க இடங்களுக்கு அருகில் நடக்க செய்தல் போன்றவற்றை ஏற்படுத்த கூடியதாகவும் நல்ல முன்பள்ளி இருத்தல் வேண்டும்.


Sunday, February 4, 2018

காத்தான்குடி பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலையின் 70வது சுதந்திர தின நிகழ்வுகள்





கடந்த 04.02.2018 அன்று இலங்கையின் 70வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலும் முஸ்லிம்களால் பல்வேறு நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வு காத்தான்குடிப் பிரதேசத்தில் அமைந்துள்ள பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலையின் விரிவுரையாளர்கள், மற்றும் மாணவர்களால் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.

பிஸ்மி குர்ஆன் பாடசாலையின் பணிப்பாளர் அஸ்ஹர் நளீமீ அவர்கள் தேசியக் கொடியினை மாணவர்கள் முன்னிலையில் ஏற்றி வைப்பதனையும் பிஸ்மி குர்ஆன் பாடசாலையின் பணிப்பாளர் நுஸ்ரி நளீமீ மற்றும் ஷரீஆ - அரபுக்கற்கை நெறியின் பொறுப்பாளர் நுபைல் நளீமீ ஆகியோர் இங்கு சமூகமளித்துள்ளமையினையும் நாம்  காணலாம்.

மாணவர்களால் தேசிய ஒற்றுமையினை வலியுறுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டது.

  தேசிய கல்வி நிறுவகத்தின் பாரம்பரிய மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் ஊடாக அரபு மொழிப் பாடத்திற்கான மொடியூல் தயாரிக்கும் செயற்திட்டத்திட...