கடந்த 04.02.2018 அன்று இலங்கையின் 70வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலும் முஸ்லிம்களால் பல்வேறு நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வு காத்தான்குடிப் பிரதேசத்தில் அமைந்துள்ள பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலையின் விரிவுரையாளர்கள், மற்றும் மாணவர்களால் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.
பிஸ்மி குர்ஆன் பாடசாலையின் பணிப்பாளர் அஸ்ஹர் நளீமீ அவர்கள் தேசியக் கொடியினை மாணவர்கள் முன்னிலையில் ஏற்றி வைப்பதனையும் பிஸ்மி குர்ஆன் பாடசாலையின் பணிப்பாளர் நுஸ்ரி நளீமீ மற்றும் ஷரீஆ - அரபுக்கற்கை நெறியின் பொறுப்பாளர் நுபைல் நளீமீ ஆகியோர் இங்கு சமூகமளித்துள்ளமையினையும் நாம் காணலாம்.
மாணவர்களால் தேசிய ஒற்றுமையினை வலியுறுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டது.
No comments:
Post a Comment