Sunday, August 19, 2018

தரம் 5 மாணவர்களுக்கான சிங்கள மொழிப் பயிற்சிக்கருத்தரங்கு - 2018


இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைக்குத்தோற்றிய தரம் 5 மாணவர்களுக்கான சிங்களப் பயிற்சிக்கருத்தரங்கு கடந்த 18.08.2018 -19.08.2018 வரை இரு நாட்கள் (சனி,ஞாயிறு) காத்தான்குடி மொழிகள் கற்கை நிலையத்தினால் உமர் ஷரீப் பள்ளிவாயலில் நடைபெற்றது. 

இப்பயிற்சி கருத்தரங்கில் மாணவர்கள் இலகு முறையில் சிங்கள மொழியினை எப்படி வாசிப்பது ? அன்றாட பாவனைக்குரிய சொற்பிரயோகங்கள் என்ன தரம் 6ல் எவ்வாறு நாம் இலகுவாக சிங்கள மொழியினை கற்க முடியும் என்ற வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.

இதில் வளவாளராக காத்தான்குடி ஆசிரிய மத்திய நிலையத்தின் தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தரான திரு.A.L.M.றிஸ்வி அவர்களும், கணினி டிசைனிங் வடிவமைப்பாளர் திரு.B.A..அஹமட் பர்ஹான் அவர்களும் கலந்துகொண்டனர்.

இப்பயிற்சியில் கலந்துகொண்ட மாணவர்களையும் அவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்படுவதனையும் நாம் மேலே காணலாம்.

No comments:

Post a Comment

  தேசிய கல்வி நிறுவகத்தின் பாரம்பரிய மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் ஊடாக அரபு மொழிப் பாடத்திற்கான மொடியூல் தயாரிக்கும் செயற்திட்டத்திட...