Sunday, September 23, 2018

''குழந்தைகளின் உலகம் - முதியோர்கள் '' தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு  நிகழ்ச்சிகளை நடாத்துதல்

 



 
 இன்று எமது இளம் சந்ததியினர் முதியோர் தொடர்பாக பிழையான கருத்துக்களையும், எண்ணங்களினையும் கொண்டு செயற்படுகின்றனர். இவர்களிடம் முதியோர் தொடர்பான பண்புகள் மற்றும் மதிப்புக்கள் அழிந்து சென்று கொண்டிருக்கின்றன.

எமது முதியோர் பற்றிய பண்புகளையும் மதிப்புக்களையும் சிறுவர்கள் விழிப்புணர்வு பெறும் வகையில் கடந்த 21.09.2018ம் ஆண்டு காத்தான்குடி பிரதேச செயலகமும், சமூக சேவைத்திணைக்களமும் இணைந்து காத்தான்குடி பிரதேசத்தின் 250 மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கொன்றினை அல்மனார் அறிவியற் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் காத்தான்குடி பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் U.உதய சிறிதர் அவர்களின் தலைமையில் நடாத்தியது.

முதியோர்களின் 60 வயதிற்குப் பின்னரான வாழ்கை எனும் தலைப்பின் கீழ் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி ஆசிரிய மத்திய நிலைய உளவளத்துணை மற்றும் தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தரான A.L.M.றிஸ்வி அவர்கள் விரிவுரையாற்றினார்கள்.

முதியோர் ஆரோக்கியம் (தொற்று நோய்கள், தொற்றா நோய்கள்) எனும் தலைப்பின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலாளர் U.உதய சிறிதர் அவர்கள் விரிவுரையாற்றினார்கள்.

முதியோர்கள் தொடர்பான சமூகத்தின் பொறுப்பு எனும் தலைப்பில் காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி நசுருத்தீன் அவர்கள் விரிவுரையாற்றினார்கள்.

இந்நிகழ்வானது இப்பிரதேசத்தின் சமூக சேவைகள் திணைக்களத்தின் உத்தியோகத்தரான திருமதி.சிவநாயகம் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டது. 

அபிவிருத்தி உத்தியோகத்தரான திருமதி சுதர்சினி அவர்களும், பாடசாலையின் ஆசிரிய , ஆசிரியர்களும், மற்றும் சிற்றூழியர்களும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வு மாணவர்கள் பயனடைவும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. 

மேலே இந்நிகழ்வில் கலந்து கொண்ட உத்தியோகத்தர்களையும், மாணவர்களையும் நாம் காணலாம்.

No comments:

Post a Comment

  தேசிய கல்வி நிறுவகத்தின் பாரம்பரிய மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் ஊடாக அரபு மொழிப் பாடத்திற்கான மொடியூல் தயாரிக்கும் செயற்திட்டத்திட...