Monday, October 8, 2018

தரம் 9 மாணவர்களுக்கான தொகுதிப்பாட தெரிவுக்கான வழிகாட்டல் செயலமர்வு- 2018








மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் மட் / மம / ரிதிதென்ன இக்றாஃ வித்தியாலய தரம் 09 மாணவர்களுக்கான தெரிவுப்பாடம் தொடர்பான விழிப்பூட்டல் செயலமர்வு கடந்த 08.10.2018 அன்று இப்பாடசாலையில் இடம்பெற்றது.

பாடசாலை மாணவர்களின் பாடத்தெரிவின் மூலம் இன்று அவர்கள் பல்கலைக்கழக, கல்விக் கல்லூரி போன்றவற்றில் நுளைவு செய்யும் வேளையில் பல சந்தர்ப்பங்களினை இழக்க வேண்டிய நிலையேற்படுகின்றது.

சில குறிப்பிட்ட பாடங்களினை மாத்திரம் தெரிவு செய்வதன் காரணமாக இந்நிலைமை அவர்களுக்கு ஏற்படுகின்றது. இதனை நிவர்த்தி செய்யும் முகமாகவும் மாணவர்களின் அடைவு மட்டத்தினை அதிகரிக்கும் விதமாகவும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தினால் தரம் 09 மாணவர்களுக்கான பாடத்தெரிவு தொடர்பான விழிப்பூட்டல் கருத்தரங்கொன்றினை மட் / மம / ரிதிதென்ன இக்றாஃ வித்தியாலயத்தில் .இடம்பெற்றது.

இதனை மட்டக்களப்பு கல்வி வலயத்தின் கல்வி அபிவிருத்திப்பிரிவு ஏற்பாடு செய்திருந்தமையோடு, இதில் வளவாளர்களாக வழிகாட்டல் ஆலோசனை ஆலோசகர் எம்.ஆர்.ஜவாத், தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் எம்.பி.எம்.சித்தீக், மற்றும் தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.றிஸ்வி ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வினை சிறப்பாக நடாத்துவதற்கான சகல ஏற்பாடுகளினையும் இவ்வித்தியாலயத்தின் அதிபர் திரு.என்.எம்.சஹாப்தீன் அவர்களும், வழிகாட்டல் ஆலோசனை ஆசிரியர்களான திரு ஏ.எல்.எம்.றிபாஸ் மற்றும் திருமதி பஸீரா ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டிந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலே இதில் கலந்துகொண்ட வளவாளர்களினையும் மாணவர்களையும் நாம் காணலாம்.

No comments:

Post a Comment

  தேசிய கல்வி நிறுவகத்தின் பாரம்பரிய மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் ஊடாக அரபு மொழிப் பாடத்திற்கான மொடியூல் தயாரிக்கும் செயற்திட்டத்திட...