இணைய வழி (Online) மூலமான பாடசாலை மட்ட கல்வி நடவடிக்கைகளும் வலய மட்ட மேர்பார்வையும் - 14.06.2021
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் ஏறாவூர் , கோட்டப்பாடசாலைகளின் இரண்டாம் தவணைக்கான பாடசாலை மட்ட கல்வி நடவடிக்கைகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதற்கான வழிகாட்டல், ஆலோசனைகள் மற்றும் தேவையான நெறிப்படுத்தல்களை வலயக்கல்விப் பணிப்பாளர் Dr.SMMS.Umar Moulana அவர்களினால் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் இணைய வழியூடாக வழங்கப்படுகின்றது.
இதில் காத்தான்குடி கோட்டப்பாடசாலைகள் பல தமது கல்வி நடவடிக்கைள் பாதிக்கப்படாத வகையில் மாணவர்களை இணைய வழி கூடாக கற்றல் , கற்பித்தல் நடவடிக்கைகளை நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருக்கின்றன.
காத்தான்குடி கோட்டப் பாடசாலையான மட் / மம / ஹிழுரிய்யா வித்தியாலய மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை சிறப்பான முறையில் முன்னெடுப்பதற்கு இதன் அதிபர் SI.யஸீர் அறபாத் அவர்களினால் இணைய வழி கற்பித்தல் நடவடிக்கைகள் நடைபெறுவதோடு, இதில் பாடசாலை ஆசிரியர்களும் ஆர்வத்தோடு கலந்து கொண்டு கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளைப் பேணி இணைய வழி பாடசாலை கற்பித்தல் செயற்பாடுகளை சிறப்பான முறையில் செய்கின்றனர்.
வலய மற்றும் கோட்ட மட்ட மேற்பார்வைகள் இணைவழி ஊடாகவும், நேரடியாகவும் நடைபெறுகின்றன. இங்கு இப்பாடசாலையில் அதிபர் தமது கடமையில் ஈடுபட்டிருப்பதனையும், ஆசிரியர்கள் இணைய வழியூடாக கற்பித்தல் நடவடிக்கையினை மேற்கொள்வதனையும், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் உளவளத்துணை மற்றும் தொழில் வழிகாட்டல் உத்தியோககத்தர் ALM.றிஸ்வி அவர்கள் மேற்பார்வை நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதனையும் இங்கு நாம் மேலே காணலாம்.
No comments:
Post a Comment