Thursday, June 21, 2018

காத்தான்குடி முஸ்லிம் முதியோர் இல்லத்தின் மர்ஹூம் எம்.ஐ.எம்.நூர்தீன் சட்டத்தரணி அவர்களுக்கான இரங்கல் கூட்டம் - 21.06.2018

காத்தான்குடியைச் சேர்ந்த சிரேஷட சட்டத்தரணியான எம்.ஐ.எம்.நூர்தீன் அவர்கள் கடந்த திங்கள் காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்து ( 18-06-2018)  இறையடி சேர்ந்தார்.  (இன்னாலில்லாஹி வஇன்னாஇலைகி ராஜிஊன்) 

ஜாமியுழ்ழாபிரீன் பெரிய ஜூம்ஆப்பள்ளிவாயலில் இவரது ஜனாஸா தொழுகை இரவு 10.00 மணியளவில் தொழுவிக்கப்பட்டு இதே பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவரது ஜனாஸாவில் பெருந்திரளான ஊர் பிரமுகர்கள், கல்விமான்கள், அரசியல் தலைவர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர். சமூக சேவையாளரான இவர்,  காத்தான்குடியில் முஸ்லிம் முதியோர் இல்லமொன்றினை சிறப்பான முறையில் நடாத்தி வந்தார்.

இவரது மறைவினையொட்டி இம்முதியோர் இல்ல நிருவாக உறுப்பினர்கள் எம்.ஐ.எம்.நூர்தீன் சட்டத்தரணி அவர்களுக்காக இரங்கல் கூட்டமொன்றினை 21.06.2018 அன்று இதன் முதியோர் இல்ல மஸ்ஜிதில் ஏற்பாடு செய்திருந்தனர்.

இதில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன தலைவர். ஏ.எல்.ஆதலெப்பை (பலாஹி)  அவர்களும், ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அப்துல் கையும் ஷர்க்கி  அவர்களும், ஆயுர்வேத வைத்திய அதிகாரியான டொக்டர் ஜலால்டீன் அவர்களும், எம்.ஐ.எம்.நூர்தீன் சட்டத்தரணி  அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இவ்விரங்கள் உரையின் போது இந்நிலையத்தின் உபதலைவரான  கே.எம்.ஏ.அஸீஸ் அவர்கள் எம்.ஐ.எம்.நூர்தீன் சட்டத்தரணி  பற்றி


தன்னிடம் கற்ற மாணவர்கள் இன்று பல உயர் பதவிகள் வகிக்கின்றனர் என்றும், தான் ஒரு அதிபராக ஓய்வு பெற்றிருந்த போதிலும், நூர்தீன் சட்டத்தரணி அவர்களிடமிருந்து பல விடயங்களை கற்றுக்கொண்டதாகவும் தான் எப்பொழுதும் சட்டத்தரணி அவர்களின் நினைவாற்றல் மற்றும் அறிவாற்றலினைக் கண்டு வியப்படைவதாகவும் குறிப்பிட்டார். 

ஒரு நாள் சட்டத்தரணி அவர்கள் இலங்கையின் சுதந்திர தினத்தினை கேட்டபோது நான் 04.02.1948 எனக் கூறினேன். இந்த தினம் எப்படி இலங்கை அரசினால் அங்கிகரிக்கப்பட்டது என்ற வரலாறு தங்களுக்குத் தெரியுமான என என்னிடம் வினவினார் நான் இல்லை. என்றேன். அப்போது அவர் ஆங்கிலேயர் இலங்கைக்கு சுதந்திரம் வழங்கிய வேளையில் இலங்கைக்கான அரசியல் யாப்பொன்றினை வரைய வேண்டிய தேவை இருந்தது. இதற்கான வரைவினை சேர் ஐவன் ஜெனிஸ் அன்று மேற்கொண்டுள்ளார். எனவே இவரது பிறந்த தினத்தினையே இலங்கையின் சுதந்திர தினமாக வைப்பதற்கு அன்று அனைவரினாலும் கூறப்பட்ட வேளையில் அதற்கு அவர் இந்த அரசியல் யாப்பினை தான் வரைவதற்கு தனக்கு தனது மனைவியியே துணைநின்றவள் என்றும், எனவே அவளது பிறந்த தினத்தினை வைக்குமாறு கூறி அத்தினமே இன்று இலங்கையின் சுதந்திர தினமாக அனைவரினாலும் கொண்டாடப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். 

இத்தகவலை தான் மட்டக்களப்பு கிறீன் காட்ன் ஹோட்டல் சட்டத்தரிணிகள் ஒன்றிணைந்து நடாத்திய ஒரு நிகழ்வில் கூறி விசாரித்த வேளையில் அவர்கள் கூட இவ்வானதொரு வரலாற்றினை அறிந்திராத நிலையினைக் கண்டு ஆச்சரியமடைந்தாக குறிப்பிட்டார்.

ஒம்தாச்சி மடம் என்ற பெயர் வந்தமைக்கான வரலாறு முதியோர் இல்ல நிதி சேகரிப்புக்காக ஒம்தாச்சி மடத்தினை தான்டிச் சென்று கொண்டிருந்தோம்.  அப்போது ஒம்தாச்சி மடம் என்ற பெயர் எப்படி வந்தது என்று தெரியுமா? என என்னிடம் கேட்டார் நான் அதற்கு தெரியாது என்ற போது, ஒரு கிறிஸ்தவ பாதரின் பெயர்தான் அவர் அந்த இடத்தினை ஆலயத்திற்கு வழங்கியமை காரணமாகவே அப்பெயர் அவ்விடத்திற்கு சூட்டப்பட்டடுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பொறளை கணத்தை மைதானம் வரலாறு ' நாங்கள் ஒரு நாள் முதியோர் இல்ல நிதி சேகரிப்புக்காக  கொழும்புக்குச் சென்றிருந்தோம். அவ்வேளையில் சேர் அவர்கள் பொறளை கனத்தை மைதானம் யாருக்குரியது என்று தெரியுமான எனக்கேட்டார் அதற்கு நான் தெரியாதென்ற போது, அது சேர் ராஸிக் பரீட் அவர்களின் குதிரை கட்டுவதற்கான திடல் என்றும் பின்னர் அது கனத்தைக்கு கொடுக்கபட்ட வரலாற்றினையும் தன்னிடம் கூறியாக குறிப்பிட்டார்

இவைபோன்ற பல அரிதான வரலாற்று துணுக்குகளை தன்னிடம் கூறியுள்ளதாகவும் அவைகளை தான் ஒரு தினக்குறிப்பேட்டில் எழுதி வைத்துள்ளேன் என்றும் பிறகொரு சந்தரப்பத்தில் இவற்றினை தெரிவிப்பதாகவும் கூறினார்.

நிதி சேகரிப்புக்குச் செல்கின்ற வேளையில் வீணான செலவுகளை அவர் ஒரு போதும் விரும்பமாட்டார் எனக்குறிப்பிட்டாமையோடு, தனது கொழும்பு வீட்டில் தங்கியிருந்து அதற்கான வசூலுக்கு செல்வார் எனக்குறிப்பிட்டார்.எனவே அவரோடு தோளோடு தோள் நின்று தாம் அனைவரும் உழைத்தமை தமக்கு பெருமையளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்விரங்கள் உரையின் போது இந்நிலையத்தின் உபதலைவரான  மௌலவி எம்.எச்.எம்.இக்பால் (பலாஹி) அவர்கள் எம்.ஐ.எம்.நூர்தீன் சட்டத்தரணி  பற்றி


சட்டத்தரிணி அவர்களை தான் வீணான எந்தவொரு விடத்திலும் அவர் தனது நேரத்தினை செலவு செய்வதனையோ , பிறரைப்பற்றி அரட்டை அடிக்கின்ற எந்தெவொரு செயற்பாடுகளையோ தான் ஒரு போதும் அவரிடம் கண்டெதில்லையெனக்குறிப்பிட்டார்.

சட்டத்தரிணி அவர்கள் ஒருவரோடு நண்பராக இருக்கின்றார் எனில், அவர் ஒரு கல்விமானாக அல்லது கற்றலில் ஆசையுள்ளவராக அல்லது சமூக உணர்வுள்ள ஒருவராக இருப்பார். எனக்குறிப்பிட்டார்.

மேலும் இவர் தனது உரையில் சட்டத்தரணி அவர்களின் மகனான அஹ்மத் நுஸ்கி அவர்கள் நிதி சேகரிப்பில் தனது தந்தையினை விஞ்சும் அளவுக்கு தங்களோடு  தோள் நின்று ஒத்துழைப்பு வழங்குவதாகவும் எதிர்காலத்தில் இந்த தூய பணியில் அவரையும் இணைத்துக்கொண்டு பயணிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார். 

இதனைத்தொடர்ந்து கலீல் ஆசிரியர் அவர்களினாலும் சட்டத்தரணி அவர்களின் வரலாறு பற்றி கூறப்பட்டது. 


மேலும் குடும்ப அங்கத்தவர்களில் ஒருவரான நஜீர் ஆசிரியர் அவர்களினால்

சட்டத்தரணி அவர்களின் இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்று என்றும், அவரை இறைவன் பொருந்திக்கொண்டுள்ளதன் காரணமாகவே நாம் இன்று அவரது புகழைப் பேசிக்கொண்டிருக்கின்றோம் எனவும், எதிர்கால சந்ததியினருக்கான பல படிப்பினைகளை அவர்கள் எம்மில் விட்டுச்சொன்றுள்ளார் எனவே அவைகளை நாம் எடுத்து நடந்துகொள்வதே அவருக்கு நாம் செய்யும் கைமாறு எனவும் குறிப்பிட்டார்.

செயலாளர் அவர்களின் நன்றியுரை இறுதியாக இந்நிலையத்தின் செயலாளர் காலித் ஆசிரியர் அவர்களினால் நன்றியுரை வழங்கபபட்டது.
தொகுப்பு:- குடும்ப அங்கத்தவர்களில் ஒருவரான ஏ.எல்.எம்.றிஸ்வி (CGO)காத்தான்குடி 







Wednesday, June 6, 2018

OPEN EDUCATION CENTERன் பெற்றோருக்கான இப்தார் திறக்கும் நிகழ்வுகள்










06.06.2018 அன்று கலாநிதி அலவி ஷரீப்தீன் நளீமீ அவர்களின் தலைமையின் கீழ் இயங்கும் காத்தான்குடி   Open Education Centerன் மாணவர்களின் பெற்றோருக்கான இப்தார் நிகழ்வு இடம்பெற்றது.

காத்தான்குடி பிரதேசத்தில் மாணவர்களின் கற்றல், கற்பித்தல் மற்றும் ஒழுக்கப்பண்பாடுகளை மேம்படுத்தும் விதமாக இந்நிலையமும் இதன் இரு கிளை நிலையங்களும் சிறப்பாக இயங்கி வருகின்றமையோடு அனைவரது கவனத்தினையும் ஈர்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பிட்ட காலத்திற்குள் இந்நிலையங்கள் இப்பிரதேச மக்களின் பாராட்டினைப் பெற்றிருப்பதோடு, மாணவர்களின் கற்றல் மற்றும் ஆண்மீகப் பயிற்சி நெறியில் முன்னேற்றகரமான வேலைத்திட்டங்களை மேற்கொள்கின்றன.

இன்றைய பெற்றோர் ஒன்று கூடலின் போது இந்நிலையப்பொறுப்பாளர் சாகிர் முஸ்தபா அவர்கள் இந்நிலையங்களில் கல்வி கற்கின்ற மாணவர்களின் கற்றல் பெறுபேறுகளை முன்னேற்றம் அடையச் செய்வது போன்று அவர்களது ஒழுக்கப்பண்பாடுகளை மேம்படுத்தும் நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டே இந்நிலையங்கள் இயங்குவதாகக் குறிப்பிட்டார். பெற்றோர்கள்  தமது பிள்ளைகளை இவ்விலக்கினை நோக்கிகொண்டு செல்வதற்கு தங்களுக்கு உறுதுணையாகச் செயற்பட வேண்டுமெனவும் வேண்டிக்கொண்டார்.

இந்நிலையத்தின் ஸ்தாபகர் கலாநிதி அலவி ஷரீப்தீன் அவர்கள் மாணவர்களின் இப்தார் மற்றும் ஆன்மீக பயிற்சிகளுக்காக ரூபா பத்து இலட்சம் வரை இம்முறை செலவு செய்திப்பதாக குறிப்பிட்டார். எனவே மாணவர்கள் இவ்வரிய சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி பயன்பெற வேண்டுமெனவும் வேண்டிக்கொண்டார்.

மற்றுமொரு நிலையப்பொறுப்பாளரும் மனித உரிமை பாதுகாப்பு அதிகாரியுமான திரு.அஸீஸ் அவர்கள் தொடர்ந்து உரையாற்றுகையில் இன்றைய எமது இஸ்லாமிய சமூகத்தின் அவல நிலையினை புள்ளி விபரங்களோடு குறிப்பிட்டமையோடு, இவ்வாறான நிலைகளிலிருந்து இந்நிலையங்களில் கற்கின்ற எமது பிள்ளைகள் பாதுகாக்கப்பட்டு இருப்பது நாம் அனைவரும் செய்த பாக்கிமாகும் எனக்குறிப்பிட்டார்.

எமது பிரதேசத்திலும் மாணவர்களின் ஒழுக்கப்பண்பாடுகள் வீழ்ச்சியடைந்து வருவதானது எதிர்கால சமூகத்தின் அச்சநிலையினை தோற்றுவித்திருக்கின்றது என்ற உண்மைகள் அவரால் தெளிவுபடுத்தப்பட்டது. எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து மாணவர்களின் கற்றல் மற்றும் ஒழுக்க மேம்பாட்டிற்கு உழைக்க வேண்டுமெனவும் வேண்டிக்கொண்டார்.

இறுதியாக இந்நிலையத்தின் உயர்ச்சிக்காவும், இதன் ஸ்தாபகர், மற்றும் இதற்காக உழைக்கின்ற அனைவருக்காகவும் இந்நன்னாளில் இறைவனிடம் பிராத்திக்குமாறும் கேட்டுக்கொண்டார். நிகழ்வுகள் யாவும் இப்தார் திறப்புடன் நிறைவுற்றது.

நாம் மேலே இந்நிலையங்களின் பொறுப்பாளர்களினால் பெற்றோர் மாணவர்களுக்கு உரையாற்றப்படுவதனையும், இதில் கலந்துகொண்ட பெற்றோர்கள் மாணவர்களையும் காணலாம்.

Monday, June 4, 2018

பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலையின் தரம் 8 மாணவர்களின் ஆசிரியர்களுக்கான இப்தார் நிகழ்வு - 2018







 காத்தான்குடி பிஸ்மி பாடசாலை மாணவர்களினால் 04.06.2018 அன்று இப்தார் நிகழ்வு ஆசிரியர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. காத்தான்குடி பிரதேசத்தில் மாணவர்களின் கல்வி, மற்றும் ஆன்மீக மேம்பாட்டினை அடிப்படையாகக்கொண்டு கடந்த பல வருடங்களாக பிஸ்மி பாடசாலையானது இயங்கிவருகின்றது. இதில் ஆண் , பெண் மாணவ மாணவியர் பயிற்றுவிக்கப்படுகின்றனர்.

இப்பிரதேசத்தில் மாணவர் பயிற்றுவித்தல் நடவடிக்கையில் பல முன்மாதிரியான செயற்பாடுகளை முன்னெடுத்து வருவது இப்பாடசாலையின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.

இதன் ஒரு அங்கமாக மாணவர்களின் ஆளுமை விருத்தியை  மேம்படுத்தும் விதமாக தரம் 8 மாணவர்கள் கலை நிகழ்ச்சிகளையும், மேடைப் பேச்சுக்களையும் ஒழுங்கு செய்திருந்தனர். இதன் போது இங்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான இப்தார் நிகழ்வும் இம்மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆசிரியர்கள் சார்பாக உரையாற்றிய இப்பாடசாலையின் பணிப்பாளர் நுஸ்ரி நளீமீ அவர்கள் "மாணவர்கள் தமது புறக்கீர்த்திய செயற்பாடுகளில் எவ்வளவு தூரம் ஆர்வம் காட்டுகின்றனறோ அதனையும் விட பண்மடங்கு தமது கற்றல் நடவடிக்கையில் காண்பிக்க வேண்டுமென்றும், ஒரு ஆசிரியர் தமது மாணவனின் கற்றல் மேம்பாட்டின் காரணமாகவும், ஒழுக்கப்பண்பாட்டின் ஊடாகவும் இவர் எனது மாணவர் என்ற பெறுமையினை ஒவ்வொரு மாணவரும் தேடிக்கொடுக்க வேண்டுமென்றும் வேண்டிக்கொண்டார். இதுவே மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தேடிக்கொடுக்கும் பெறுமையாகும் எனக்குறிப்பிட்டார்கள்.."

இச்சிறுவயதில் இம்மாணவர்களின் இம்முன்மாதிரியான செயற்பாடு அனைத்து ஆசிரியர்களினாலும் பாராட்டப்பட்டது. மேலே நாம் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளையும் , இம்மாணவரிகளினால் ஆசிரியர்களுக்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இப்தார் நிகழ்வினையும்  காணலாம்.

  தேசிய கல்வி நிறுவகத்தின் பாரம்பரிய மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் ஊடாக அரபு மொழிப் பாடத்திற்கான மொடியூல் தயாரிக்கும் செயற்திட்டத்திட...