Monday, October 22, 2018

மட்/மம/அல்ஹிறா வித்தியாலய வலய மட்ட வெளிவாரி மதிப்பீடு - 2018











கடந்த 22.10.2018ம் திகதி மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி பாடசாலைகளுக்கிடையிலான வலய மட்ட மதிப்பீட்டு நடவடிக்கை மட் / மம / அல் - அல்ஹிறா  வித்தியாலயத்தில் நடைபெற்றது.  இதனை உதவிக்கல்விப் பணிப்பாளர் Mr.T.M.Sஅஹமட் (SLEAS) அவர்கள்  வழிநடாத்தியதோடு, ஏனைய உதவிக்கல்விப்பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், காத்தான்குடி கோட்டக்கல்விப் பணிப்பாளர் MACM.பதுர்தீன் அவர்களும் இம்மேற்பார்வை நடவடிக்கையில் இணைந்துகொண்டனர்.

  இதில்  உதவிக்கல்விப் பணிப்பாளர் Mr.T.M.Sஅஹமட் (SLEAS)  அவர்களால்  பாடசாலையின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கையினை சிறப்பான முறையில் மேற்கொள்வதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை தமது பாடசாலையில் வழங்க வேண்டும் என்ற கருத்துக்கள் ஆசிரியர்களுக்கு முன்வைக்கப்பட்டன.

இம்மேற்பார் குழுவின் தலைமை அதிகாரியான Mr.T.M.Sஅஹமட் (SLEAS) அவர்கள் காத்தான்குடி கோட்ட கல்வி வளர்ச்சியானது எப்போதும் உயர்நிலையில் உள்ளதாகவும், கடந்த காலங்களில் 2014ம் ஆண்டு எமது வலயம் வீழ்ச்சியான பெறுபேற்றினை பெற்ற போதும் . இப்பிரதேசத்தின் கல்வி நிலை உயர் நிலையில் காணப்பட்டதாக குறிப்பிட்டார்.அதிலும் குறிப்பாக அல்ஹிறா வித்தியாலயதின் பெறுபேறுகள் எப்போதும் உயர்நிலையில் உள்ளதாகவும், அதன் வளர்ச்சி எப்போதும் சிறப்பானது எனவும் கூறினார்.

 இதற்கு இப்பிரதேசத்தின் கோட்டக் கல்வி அதிகாரியான  MACM.பதுர்தீன்  அவர்களின் சிறப்பான மேற்பார்யும் அவர்களது தூர நோக்குமே பிரதான காரணம் என அவர் தெரிவித்தமையோடு, அவரது சிறப்பான பாடசாலை மேற்பார்வையினையும், ஆளுமையினையும் பாராட்டினார்.

இப்பாடசாலையின் சிரேஷட ஆசிரியர் அமீன் அவர்களினால் மேற்பார்வை குழுவினறுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டமையோடு, எமது குறைகளை நாம் உணர்ந்து கொள்ளும் வகையிலும், அவைகளை குறைகளாக கூறுகின்றனர் என ஆசிரியர்களான தாங்கள் அறியாத வகையிலும் மிகவும் கட்சிதமாக, நேர்த்தியாக, ஆசிரியர்களின் மனோநிலையினை உளவியல் ரீதியிரான அனுகுமுறையோடு, முன்வைத்தமைக்கு இம்மேற்பார்வை குழுவின் தலைமை அதிகாரியான Mr.T.M.Sஅஹமட் (SLEAS)  அவர்களுகு ஆசிரியர்கள் சார்பாகவும், பாடசாலையின் நிர்வாகம் சார்பாகவும் தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.

மேலும் இப்பாடசாலையானது இம்முறை மேற்பார்வையின் போது 72 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டது.

மேலே இம்மேற்பார்வை நடவடிக்கையில் கலந்து கொண்ட அதிகாரிகளையும், பாடசாலை ஆசரியர்களையும் நாம் காணலாம்.

Thursday, October 18, 2018

மட்டக்களப்பு மத்தி வலயத்தின் வழிகாட்டல் ஆலோசனை ஆசிரியர்களுக்கான வழுவூட்டல் கருத்தரங்கு - 2018







கடந்த 13.10.2018 ம் திகதி மட்டக்களப்பு மத்தி வலயத்தின் காத்தான்குடி கல்விக் கோட்டத்தில் வழிகாட்டல் ஆலோசனை ஆசிரியர்களுக்கான வழுவூட்டல் செயலமர்வு காத்தான்குடி அன்வர் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

பாடசாலை மட்ட வழிகாட்டல் ஆலோசனை வேலைத்திட்டங்களை எதிர்காலத்தில் செம்மையாக எவ்வாறு கொண்டு செல்வது என்றும், ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட வழிகாட்டல் வேலைத்திட்டத்தினை கொண்டு செல்வதற்கான ஆசிரியர் மதிப்பீட்டு படிவங்களும் வழங்கப்பட்டன.

இதன் இணைப்பு அதிகாரியாக காத்தான்குடி கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.பதுர்தீன் அவர்களும், வளவாளர்களாக தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.றிஸ்வி மற்றும் எம்.பி.எம்.சித்தீக் அவர்களும், வழிகாட்டல் ஆலோசனை ஆலோசகர் எம்.ஆர்.ஜவாத் அவர்களும் கலந்து கொண்டனர்.

மேலே இதில் பங்கேற்ற அதிகாரிகளையும், ஆசிரிய ஆசிரியர்களினையும் நாம் காணலாம்.

Monday, October 8, 2018

தரம் 9 மாணவர்களுக்கான தொகுதிப்பாட தெரிவுக்கான வழிகாட்டல் செயலமர்வு- 2018








மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் மட் / மம / ரிதிதென்ன இக்றாஃ வித்தியாலய தரம் 09 மாணவர்களுக்கான தெரிவுப்பாடம் தொடர்பான விழிப்பூட்டல் செயலமர்வு கடந்த 08.10.2018 அன்று இப்பாடசாலையில் இடம்பெற்றது.

பாடசாலை மாணவர்களின் பாடத்தெரிவின் மூலம் இன்று அவர்கள் பல்கலைக்கழக, கல்விக் கல்லூரி போன்றவற்றில் நுளைவு செய்யும் வேளையில் பல சந்தர்ப்பங்களினை இழக்க வேண்டிய நிலையேற்படுகின்றது.

சில குறிப்பிட்ட பாடங்களினை மாத்திரம் தெரிவு செய்வதன் காரணமாக இந்நிலைமை அவர்களுக்கு ஏற்படுகின்றது. இதனை நிவர்த்தி செய்யும் முகமாகவும் மாணவர்களின் அடைவு மட்டத்தினை அதிகரிக்கும் விதமாகவும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தினால் தரம் 09 மாணவர்களுக்கான பாடத்தெரிவு தொடர்பான விழிப்பூட்டல் கருத்தரங்கொன்றினை மட் / மம / ரிதிதென்ன இக்றாஃ வித்தியாலயத்தில் .இடம்பெற்றது.

இதனை மட்டக்களப்பு கல்வி வலயத்தின் கல்வி அபிவிருத்திப்பிரிவு ஏற்பாடு செய்திருந்தமையோடு, இதில் வளவாளர்களாக வழிகாட்டல் ஆலோசனை ஆலோசகர் எம்.ஆர்.ஜவாத், தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் எம்.பி.எம்.சித்தீக், மற்றும் தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.றிஸ்வி ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வினை சிறப்பாக நடாத்துவதற்கான சகல ஏற்பாடுகளினையும் இவ்வித்தியாலயத்தின் அதிபர் திரு.என்.எம்.சஹாப்தீன் அவர்களும், வழிகாட்டல் ஆலோசனை ஆசிரியர்களான திரு ஏ.எல்.எம்.றிபாஸ் மற்றும் திருமதி பஸீரா ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டிந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலே இதில் கலந்துகொண்ட வளவாளர்களினையும் மாணவர்களையும் நாம் காணலாம்.

  தேசிய கல்வி நிறுவகத்தின் பாரம்பரிய மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் ஊடாக அரபு மொழிப் பாடத்திற்கான மொடியூல் தயாரிக்கும் செயற்திட்டத்திட...