மட்/மம/அல்ஹிறா வித்தியாலய வலய மட்ட வெளிவாரி மதிப்பீடு - 2018
கடந்த 22.10.2018ம் திகதி மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி பாடசாலைகளுக்கிடையிலான வலய மட்ட மதிப்பீட்டு நடவடிக்கை மட் / மம / அல் - அல்ஹிறா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இதனை உதவிக்கல்விப் பணிப்பாளர் Mr.T.M.Sஅஹமட் (SLEAS) அவர்கள் வழிநடாத்தியதோடு, ஏனைய உதவிக்கல்விப்பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், காத்தான்குடி கோட்டக்கல்விப் பணிப்பாளர் MACM.பதுர்தீன் அவர்களும் இம்மேற்பார்வை நடவடிக்கையில் இணைந்துகொண்டனர்.
இதில் உதவிக்கல்விப் பணிப்பாளர் Mr.T.M.Sஅஹமட் (SLEAS) அவர்களால் பாடசாலையின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கையினை சிறப்பான முறையில் மேற்கொள்வதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை தமது பாடசாலையில் வழங்க வேண்டும் என்ற கருத்துக்கள் ஆசிரியர்களுக்கு முன்வைக்கப்பட்டன.
இம்மேற்பார் குழுவின் தலைமை அதிகாரியான Mr.T.M.Sஅஹமட் (SLEAS) அவர்கள் காத்தான்குடி கோட்ட கல்வி வளர்ச்சியானது எப்போதும் உயர்நிலையில் உள்ளதாகவும், கடந்த காலங்களில் 2014ம் ஆண்டு எமது வலயம் வீழ்ச்சியான பெறுபேற்றினை பெற்ற போதும் . இப்பிரதேசத்தின் கல்வி நிலை உயர் நிலையில் காணப்பட்டதாக குறிப்பிட்டார்.அதிலும் குறிப்பாக அல்ஹிறா வித்தியாலயதின் பெறுபேறுகள் எப்போதும் உயர்நிலையில் உள்ளதாகவும், அதன் வளர்ச்சி எப்போதும் சிறப்பானது எனவும் கூறினார்.
இதற்கு இப்பிரதேசத்தின் கோட்டக் கல்வி அதிகாரியான MACM.பதுர்தீன் அவர்களின் சிறப்பான மேற்பார்யும் அவர்களது தூர நோக்குமே பிரதான காரணம் என அவர் தெரிவித்தமையோடு, அவரது சிறப்பான பாடசாலை மேற்பார்வையினையும், ஆளுமையினையும் பாராட்டினார்.
இப்பாடசாலையின் சிரேஷட ஆசிரியர் அமீன் அவர்களினால் மேற்பார்வை குழுவினறுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டமையோடு, எமது குறைகளை நாம் உணர்ந்து கொள்ளும் வகையிலும், அவைகளை குறைகளாக கூறுகின்றனர் என ஆசிரியர்களான தாங்கள் அறியாத வகையிலும் மிகவும் கட்சிதமாக, நேர்த்தியாக, ஆசிரியர்களின் மனோநிலையினை உளவியல் ரீதியிரான அனுகுமுறையோடு, முன்வைத்தமைக்கு இம்மேற்பார்வை குழுவின் தலைமை அதிகாரியான Mr.T.M.Sஅஹமட் (SLEAS) அவர்களுகு ஆசிரியர்கள் சார்பாகவும், பாடசாலையின் நிர்வாகம் சார்பாகவும் தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.
இம்மேற்பார் குழுவின் தலைமை அதிகாரியான Mr.T.M.Sஅஹமட் (SLEAS) அவர்கள் காத்தான்குடி கோட்ட கல்வி வளர்ச்சியானது எப்போதும் உயர்நிலையில் உள்ளதாகவும், கடந்த காலங்களில் 2014ம் ஆண்டு எமது வலயம் வீழ்ச்சியான பெறுபேற்றினை பெற்ற போதும் . இப்பிரதேசத்தின் கல்வி நிலை உயர் நிலையில் காணப்பட்டதாக குறிப்பிட்டார்.அதிலும் குறிப்பாக அல்ஹிறா வித்தியாலயதின் பெறுபேறுகள் எப்போதும் உயர்நிலையில் உள்ளதாகவும், அதன் வளர்ச்சி எப்போதும் சிறப்பானது எனவும் கூறினார்.
இதற்கு இப்பிரதேசத்தின் கோட்டக் கல்வி அதிகாரியான MACM.பதுர்தீன் அவர்களின் சிறப்பான மேற்பார்யும் அவர்களது தூர நோக்குமே பிரதான காரணம் என அவர் தெரிவித்தமையோடு, அவரது சிறப்பான பாடசாலை மேற்பார்வையினையும், ஆளுமையினையும் பாராட்டினார்.
இப்பாடசாலையின் சிரேஷட ஆசிரியர் அமீன் அவர்களினால் மேற்பார்வை குழுவினறுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டமையோடு, எமது குறைகளை நாம் உணர்ந்து கொள்ளும் வகையிலும், அவைகளை குறைகளாக கூறுகின்றனர் என ஆசிரியர்களான தாங்கள் அறியாத வகையிலும் மிகவும் கட்சிதமாக, நேர்த்தியாக, ஆசிரியர்களின் மனோநிலையினை உளவியல் ரீதியிரான அனுகுமுறையோடு, முன்வைத்தமைக்கு இம்மேற்பார்வை குழுவின் தலைமை அதிகாரியான Mr.T.M.Sஅஹமட் (SLEAS) அவர்களுகு ஆசிரியர்கள் சார்பாகவும், பாடசாலையின் நிர்வாகம் சார்பாகவும் தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.
மேலும் இப்பாடசாலையானது இம்முறை மேற்பார்வையின் போது 72 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டது.
மேலே இம்மேற்பார்வை நடவடிக்கையில் கலந்து கொண்ட அதிகாரிகளையும், பாடசாலை ஆசரியர்களையும் நாம் காணலாம்.
மேலே இம்மேற்பார்வை நடவடிக்கையில் கலந்து கொண்ட அதிகாரிகளையும், பாடசாலை ஆசரியர்களையும் நாம் காணலாம்.
No comments:
Post a Comment