மட்டக்களப்பு மத்தி வலயத்தின் வழிகாட்டல் ஆலோசனை ஆசிரியர்களுக்கான வழுவூட்டல் கருத்தரங்கு - 2018
கடந்த 13.10.2018 ம் திகதி மட்டக்களப்பு மத்தி வலயத்தின் காத்தான்குடி கல்விக் கோட்டத்தில் வழிகாட்டல் ஆலோசனை ஆசிரியர்களுக்கான வழுவூட்டல் செயலமர்வு காத்தான்குடி அன்வர் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
பாடசாலை மட்ட வழிகாட்டல் ஆலோசனை வேலைத்திட்டங்களை எதிர்காலத்தில் செம்மையாக எவ்வாறு கொண்டு செல்வது என்றும், ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட வழிகாட்டல் வேலைத்திட்டத்தினை கொண்டு செல்வதற்கான ஆசிரியர் மதிப்பீட்டு படிவங்களும் வழங்கப்பட்டன.
இதன் இணைப்பு அதிகாரியாக காத்தான்குடி கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.பதுர்தீன் அவர்களும், வளவாளர்களாக தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.றிஸ்வி மற்றும் எம்.பி.எம்.சித்தீக் அவர்களும், வழிகாட்டல் ஆலோசனை ஆலோசகர் எம்.ஆர்.ஜவாத் அவர்களும் கலந்து கொண்டனர்.
மேலே இதில் பங்கேற்ற அதிகாரிகளையும், ஆசிரிய ஆசிரியர்களினையும் நாம் காணலாம்.
No comments:
Post a Comment