மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் தரம் 04 மாணவர்களுக்கான சிங்கள மொழி அறிவு விருத்தி வேலைத்திட்டம் கடந்த 29.07.2019 தொடக்கம் 30.07.2019 வரை இரு நாட்கள் ஓட்டமாவடிக் கோட்ட அமீர் அலி வித்தியாலயத்தில் இடம் பெற்றது.
இதன் மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதல்களை மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.எஸ்.எம்.எம்.எஸ்.டொக்டர் உமர் மௌலான (SLEAS) அவர்கள் வழங்கினார்கள்.
மேலும் இணைப்பாளராக ஏ.இப்றாஹீம் (ADE) அவர்கள் செயற்பட்டார்கள். மேலும் இதன் வளவாளர்களாக ஏ.எல்.எம்.றிஸ்வி (CGO) அவர்களும், எம்.பி.எம்.சித்தீக் (CGO) அகியோரும் காணப்பட்டனர். மேலே மாணவர்களுக்குரிய பயிற்சிகளையும், வழிகாட்டுதல்களினையும் றிஸ்வி அவர்கள் வழங்குவதோடு, மாணவர்கள் உற்சாகமாக செயற்படுவதனையும் நாம் காணலாம்.
No comments:
Post a Comment