Wednesday, September 4, 2019

காத்தான்குடிக் கோட்ட மட் /மம /பத்திரியா வித்தியாலயத்தின் தரம் 05 மாணவர்களுக்கான இரண்டாம் தேசிய மொழி சிங்கள பயிற்சிக்கருத்தரங்கு. 02.09.2019
















மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் தரம் 05 மாணவர்களுக்கான சிங்கள மொழி அறிவு விருத்தி வேலைத்திட்டம் கடந்த 02.09.2019 தொடக்கம் 03.09.2019 வரை இரு நாட்கள் காத்தான்குடிக் கோட்ட மட் /மம /பத்திரியா வித்தியாலயத்தில் இடம் பெற்றது.

இதன் மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதல்களை மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.எஸ்.எம்.எம்.எஸ்.டொக்டர் உமர் மௌலான (SLEAS)  அவர்கள் வழங்கினார்கள். இணைப்பாளராக ஏ.இப்றாஹீம் (ADE) அவர்கள் செயற்பட்டார்கள். 

மேலும் இதன் வளவாளர்களாக ஏ.எல்.எம்.றிஸ்வி (CGO)  அவர்களும், எம்.பி.எம்.சித்தீக் (CGO) அகியோரும் காணப்பட்டனர். மேலே மாணவர்களுக்குரிய பயிற்சிகளையும், வழிகாட்டுதல்களினையும் றிஸ்வி அவர்கள் வழங்குவதோடு, மாணவர்கள் உற்சாகமாக செயற்படுவதனையும்  இவ்வித்தியாலயத்தின் அதிபர் எம்.எஸ்.எஸ்.அஹமட் அவர்கள் இங்கு உரையாற்றுவதனையும் நாம் காணலாம்.

காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பாதிகாரி இன்று இந்நாட்டில் இன ஒற்றுமைச் செயற்பாட்டிற்கு மொழியறிவு எவ்வளவு தூரம் அவசியம் என்றும், தன்னை இந்த செயலமர்விற்கு அழைத்த மட்டக்களப்பு மத்தி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.எஸ்.எம்.எம்.எஸ்.டொக்டர் உமர் மௌலான (SLEAS)    அவர்களையும் ஏனைய உத்தியோகத்தர்களையும் பாராட்டினார். 

மேலும் இவ்வாறான வேலைத்திட்டங்களுக்கு தமது ஒத்துழைப்பினை வழங்கத்தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.பெற்றோர்களிடம் இத்துடன் இந்த சிங்கள மொழிப்பயிற்சி கருத்தரங்கினை இடைவிடாது அரசாங்கம் நிதியளிக்காத போதிலும் தனியார் வகுப்புக்களுக்கு அனுப்பியேனும் தொடர்ச்சியாக சிங்கள மொழியினை கற்பிக்குமாறும் வேண்டிக்கொண்டார்.

பெற்றோர்களும் இந்த செயற்பாட்டினை பாராட்டியமையோடு வலயக்கல்விப் பணிப்பாளருக்கு தமது நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டனர். தொடர்ந்தும் இந்த வழிகாட்டலை வழங்குமாறும் வலயக் கல்வி அலுவலக அதிகாரிகளிடம் பெற்றோர்களும் வேண்டிக்கொண்டனர். நாம் மேலே இச்செயலர்வின் சில காட்சிகளைக்காணலாம்.


No comments:

Post a Comment

  தேசிய கல்வி நிறுவகத்தின் பாரம்பரிய மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் ஊடாக அரபு மொழிப் பாடத்திற்கான மொடியூல் தயாரிக்கும் செயற்திட்டத்திட...