காத்தான்குடி கோட்ட மட்/மம/அந்நாஸர் வித்தியாலய க.பொ.சா/தர மாணவர்களை ஜனாதிபதியின் ஸ்மார்ட் சிறிலங்கா நிகழ்ச்சியில் இணைத்து விடுவதற்கான செயலமர்வு 27.09.2019
காத்தான்குடி கோட்ட மட்/மம/அந்நாஸர் வித்தியாலய க.பொ.சா /தர மாணவர்களை ஜனாதிபதியின் ஸ்மார்ட் சிறிலங்கா நிகழ்ச்சியில் இணைத்து விடுவதற்கான செயலமர்வு கடந்த 27.09.2019 அன்று நடைபெற்றது.
இதில் காத்தான்குடி பிரசேத செயலகத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் மட்டக்களப்பு ஸ்மார்ட் சிறிலங்காவின் உத்தியோகத்தர்களும், மட்டக்களப்பு மத்தி வலயத்தின் தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் திரு.ஏ.எல்.எம்.றிஸ்வி ஆகியோரும் கலந்துகொண்டனர். க.பொ.சாதாரன பரீட்சை எழுதும் மாணவர்கள் எதிர்கால தொழில் உலகில் எவ்வாறான தொழில்களைப் பெற முடியும் அதற்கான வழிகாட்டுதல்கள் என்ன உள்ளன என்ற விடயங்கள் இங்கு தெளிவுபடுத்தப்பட்டன.
நாம் மேலே இதில் கலந்துகொண்ட மாணவர்களையும் , அவர்களது பெற்றோர்களையும், ஏனைய உத்தியோகத்தர்களையும் காணலாம். தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தரான திரு.ஏ.எல்.எம்.றிஸ்வி அவர்கள் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கான விளக்கத்தினை வழங்குகின்றார்கள்
No comments:
Post a Comment