Friday, September 6, 2019

மட்/மம/காத்தான்குடி ஹிழுறிய்யா வித்தியாலய நற்சிந்தனை நிகழ்வு - 06.09.2019








மட்/மம/காத்தான்குடி ஹிழுறிய்யா வித்தியாலயத்தில் பிரதி வெள்ளிக்கிழமை  தோறும்  மாணவர்களின் கற்றல் ஆர்வத்தினை துலங்கச் செய்யும் நோக்கோடு உலமாக்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் அல்லது துறைசார் உத்தியோகத்தர்களைக் கொண்டு  நற்சிந்தனைகளை வழங்கிவருகின்றனர்.

இதன் தொடரில் கடந்த 06.09.2019 வெள்ளிக்கிழமையன்று மாணவர்களுக்கான நற்சிந்தனையினை காத்தான்குடி ஆசிரிய மத்திய நிலைய மட்டக்களப்பு மத்தி கல்வி வலய தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.றிஸ்வி அவர்களினால் மாணவர்களுக்கான நற்சிந்தனை வழங்கப்பட்டது. 

இதில் கற்றல் இடர்பாடுகளை இல்லாமல் செய்து, சிறந்த கற்றல் நடவடிக்கையில் எவ்வாறு ஈடுபடலாம். எதிர்கால உலகில் கற்றலினால் அடையக்கூடிய பயன்கள் மற்றும் பெற்றோரின் கனவுகளை நனவாக்க நாம் என்ன செய்யலாம் என்ற விடயங்கள் மாணவர்களுக்கு கூறப்பட்டது. 

தற்போதைய அதிபர் S.I.யஸீர் அறபாத் அவர்களின் வருகையின் பின்னர் இப்பாடசாலை  வெற்றிநடை போடுவதோடு சர்வதேச ஒலிம்பியாட் போட்டி, தேசிய மட்ட, மாகாண மட்டப் போட்டிகள் மற்றும் வலய மட்டப்போட்டிகளில் பல சாதனைகளைப் புரிந்து வலயத்திற்கும், பிரதேசத்திற்கும் பெருமை ஈட்டிக்கொடுக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

நற்சிந்தனை வழங்கியதன் பின்னர் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள் கௌரவிக்கப்பட்டு, மாணவர்களின் முன்னிலையில் அச்சான்றிதழ்கள் வழங்கப்படுவதனை இங்கு நாம் காணலாம். இவ்வித்தியாலய அதிபர் S.I.யஸீர் அறபாத் அவர்கள் மத்தியில் காணப்படுகின்றார்கள்

No comments:

Post a Comment

  தேசிய கல்வி நிறுவகத்தின் பாரம்பரிய மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் ஊடாக அரபு மொழிப் பாடத்திற்கான மொடியூல் தயாரிக்கும் செயற்திட்டத்திட...