Sunday, September 1, 2019

காத்தான்குடி கோட்டப் பாடசாலையான மட்/மம / ஸூஹதா வித்தியாலய மாணவர்களின் சந்தைக்கண்காட்சி 27.04.2019









கடந்த 27.09.2019 அன்று காத்தான்குடி கோட்ட மட்/மம/ஸூஹதா வித்தியாலய மாணவர்கள் பாடசாலை பாட செயற்பாடடுகளில் ஒன்றான சந்தைக் கண்காட்சி நிகழ்வினை நடாத்தியிருந்தனர். இதில் பல பிரமுகர்கள் அதிதிகளாக கலந்துகொண்டனர். மட்டக்களப்பு மத்தி வலயத்தின் தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தரான திரு.ஏ.எல்.எல்.றிஸ்வி அவர்களும் இதில் அதிதியாக கலந்துகொண்டார்கள். இவ்வித்தியாலத்தின் அதிபர் திரு.எம்.ஸி.முனீர் அவர்களும், இதன் ஆசிரியர்கள் , பெற்றோர்களும் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இச்சின்னஞ் சிறுசுகளின் இந்த சந்தைக் கண்காட்சி அனைவரதும் பராட்டுக்களையும் பெற்றுக்கொண்டது.இந்நிகழ்வில் பிரமுகர்கள்,ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சிகரமாக ஈடுபட்டுக்கொண்டிப்பதனை மேலே நாம் காணலாம்.

No comments:

Post a Comment

  தேசிய கல்வி நிறுவகத்தின் பாரம்பரிய மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் ஊடாக அரபு மொழிப் பாடத்திற்கான மொடியூல் தயாரிக்கும் செயற்திட்டத்திட...