காத்தான்குடி ஆசிரிய மத்திய நிலையத்தில் 2-ii ஆசிரியர்களுக்கான உளவளத்துணை வழிகாட்டல் செயலமர்வு - 2018
கடந்த 19.04.2018ம் திகதி தொடக்கம் 21.04.2018ம் திகதி வரை மூன்று நாள் உளவளத்துணை செயலமர்வினை காத்தான்குடி ஆசிரிய மத்திய நிலையமானது சிறப்பாக நடாத்தியது.இதில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் தரம் 2-ii யைச் சேர்ந்த ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். மொடியூல் 14 உளவளத்துணை ஆலோசனை வழிகாட்டல் செயலமர்வே இவர்களுக்காக இடம்பெற்றது. காத்தான்குடி,ஓட்டமாவடி,ஏறாவூர் ஆகிய மூன்று கோட்டங்களையும் சேர்ந்த ஆசிரியர்கள் பங்கேற்றனர்
ஆசிரிய மத்திய நிலைய முகாமையாளர் S.ஷரீப்தீன், தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர்களான A.H.ஹிதாயதுல்லாஹ், A.L.M..றிஸ்வி, M.B..சித்தீக் ஆகியோரால் விரிவுரைகள் நடாத்தப்படுவதனை நாம் மேலே காணலாம்.
No comments:
Post a Comment