Saturday, April 7, 2018

OPEN EDUCATION CENT RES ன்  முப்பெரும் விழாக்கள்




கடந்த 06 ஏப்ரல் 2018 (வெள்ளிக்கிழமை) மாலை 04.30 மணிக்கு காத்தான்குடி அல்மனார் கல்லூரி மண்டபத்தில் கலாநிதி அலவி ஷரீப்தீன் நளீமீ அவர்களின் தலைமையில் அலவி ஷரீப்தீன் வெற்றிக்கேடய கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டும் வைபவம் மற்றும் 2017 க.பொ.சா.த பரீட்சையில் அதிவிஷேட சித்தி பெற்ற மாணவர்களை கௌரவித்தல் நிகழ்வும் நடைபெற்றது.

இதில் கௌரவ அதிதியாக எம்.நயீமுதீன் நளீமீ மேலதிக செயலாளர், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சு அவர்கள் கலந்துகொண்டார்கள் மேலும் கலாநிதி அலவி ஷரீப்தீன் அவர்களால் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்ட முஸ்லிமாக இருக்க வேண்டுமானால்........ எனும் நூல் அறிமுகத்தினை கலாநிதி பீ.எம்.எம்இர்பான் நளீமீ (தலைவர் -அறபு மொழி கற்கை நிலையம் ஜாமிஆ நளீமிய்யா) அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டது.

இதில் கொழும்பு வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி முகம்மட் சியாம் அவர்களும் கலந்துகொண்டார்கள்.

கலாநிதி அலவி ஷரீப்தீன் நளீமி அவர்கள் தனது உரையில் கல்விப் பயணத்தில் சாதனையென்பது வெறும் 9A சித்திகளைப் பெறுவது மாத்திரமல்ல. பல தடைகளையும் தகர்த்தெறிந்து எதிர்கால  இலட்சிய வெற்றிப்பயணத்தில் இமயத்தின் உச்சத்தை ஈமானிய உணர்வுகளோடு தொடுவதே வாழ்வின் வெற்றிக்கும், இலட்சியத்தின் உச்சத்திற்கும் வழிகாட்டுமென்ற அறிவுரைகளும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகள் உரையாற்றுவதனையும், போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்படுவதனையும், க.பொ.சா.தரப்பரீட்சை 2017ல் சாதனைபுரிந்த மாணவர்கள் கௌரவிக்கப்படுவதனையும் மேலே  நாம் காணலாம்.




No comments:

Post a Comment

  தேசிய கல்வி நிறுவகத்தின் பாரம்பரிய மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் ஊடாக அரபு மொழிப் பாடத்திற்கான மொடியூல் தயாரிக்கும் செயற்திட்டத்திட...