Friday, October 25, 2019

වෘත්තීය මාර්ගෝපදේශ සේවා පුහුණුකරු පුහුණු වැඩමුළුව - 2019









ජාතික ගුරු අධ්‍යාපන හා විකල්ප අධ්‍යාපන ආයතනයේ නියෝජ්‍ය අධ්‍යක්ෂ ජනරාල්ගේ මඟ පෙන්වීම යටතේ අධ්‍යාපන සංවර්ධන පර්යේෂණ හා පුහුණු  මධ්‍යස්ථානයේ දින දෙකක නේවාසික වැඩමුළුවක්, නැගෙනහිර පළාත් අධ්‍යාපන දෙපාර්තමේන්තුව වෘත්තීය මාර්ගෝපදේශක නිලධාරීන්ට පැවැත්වේ

සෑම කලාපයකින්ම ගුරු හා වෘත්තීය මාර්ගෝපදේශ නිලධාරීන්ට ආරාධනා කරන ලදී. පාසලේ වෘත්තීය මාර්ගෝපදේශනයේ අවශ්‍යතාවය පැහැදිලි කළ අතර 6 වන ශ්‍රේණියේ සිට 13 ශ්‍රේණිය දක්වා විෂය මාලාව ජාතික අධ්‍යාපන ආයතනය හරහා ගෙන ඒමට ජාතික අධ්‍යාපන ආයතනය තීරණය කළේය.


හිටපු අධ්‍යාපන අමාත්‍යාංශයේ අධ්‍යාපන අධ්‍යක්ෂ සහ වෘත්තීය මාර්ගෝපදේශක අධ්‍යක්ෂ ප්‍රේමසිරි මහත්මයා, ජාතික අධ්‍යාපන ආයතනයේ වෘත්තීය මාර්ගෝපදේශ ඒකකය භාර ගීතානි මහත්මිය, සනීර් සහ සී.කේ.වින්සන් එස්.ප්‍රන්ද්‍රන් ඇතුළු නිලධාරීන් සම්පත් පුද්ගලයා වශයෙන් මේ  වැඩමුළුවේ සහභාගි වූහ.
தொழில் வழிகாட்டற் சேவைப் பயிற்றுனர் பயிற்சிச் செயலமர்வு - 2019










தேசிய கல்வி நிறுவகத்தின் ஆசிரியர் கல்வி மற்றும் மாற்றுக் கல்விப் பீடத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் அவர்களின் வழிகாட்டலின் கீழ் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் உளவளத்துணை வழிகாட்டல் ஆலோசனை ஆசிரியர்கள், தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர்களுக்கான இரு நாள் வதிவிடச் செயலமர்வு கடந்த 23.10.2019 - 24.10.2019 வரை (02 நாட்கள்) கண்டியில் அமைந்துள்ள கல்வி அபிவிருத்தி மற்றும் பயிற்சி நிலையத்தின் குருதெனியவில் நடைபெற்றது.

இதில் ஒவ்வொரு வலயங்களிலிருந்து குறித்த ஆசிரியர்கள் மற்றும் தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இச்செயலமர்வின் பாடசாலையில் தொழில் வழிகாட்டல் பிரிவின் அவசியம் பற்றியும் எதிர்காலத்தில் தேசிய கல்வி நிறுவகத்தின் ஊடாக தரம் 06 தொடக்கம் தரம் 13 வரை இதனை பாடத்திட்டமாக கொண்டு வருவதற்கு தேசியக் கல்வி நிறுவகம் தீர்மானத்துள்ளமை பற்றியும் தெளிவுபடுத்தப்பட்டது. 

இதில் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலகம் சார்பாக இதன் தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.றிஸ்வி மற்றும் வழிகாட்டல் ஆலோசனை ஆசிரியர்களான ஏ.பி.றஸீன், மற்றும் ஏ.எல்.எம்.றிபாஸ் ஆகியார் கலந்து கொண்டனர்.

தமது வலயம் சார்பாக ஏ.எல்.எம்.றிஸ்வி தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் அவர்கள் கருத்துக்களை முன்வைத்தமையோடு, சிறந்த சிந்தனைகளையும், ஆழமான கருத்துக்களினையும் முன்வைத்தமைக்காக தமது வலயத்திற்கு மதிப்பினையும், கௌரவத்தினையும் பெற்றுக்கொடுத்தார்.

இதன் வளவாளர்களாக முன்னால் கல்வி அமைச்சின் தொழில் வழிகாட்டல் ஆலோசனைப் பிரிவுக்குப் பொறுப்பான கல்விப் பணிப்பணிப்பாளரும் தற்போதைய மாகாண உதவிக்கல்விப் பணிப்பாளருமாகிய பிரமசிறி அவர்களும், தேசிய கல்வி நிறுவகத்தின் தொழில் வழிகாட்டல் ஆலோசனைப் பிரிவுக்குப் பொறுப்பான கீதானி அவர்களும், சனீர், சீ.கே.வின்சன்.எஸ்.பிரந்திரன் ஏனைய உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர். 

Wednesday, October 16, 2019

ஏறாவூர் கோட்ட மட் /மம / ஜிப்ரிய்யா   வித்தியாலயத்தின் தரம் 04 மாணவர்களுக்கான இரண்டாம் தேசிய மொழி சிங்கள பயிற்சிக் கருத்தரங்கு. 16.10.2019









மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் தரம் 04 மாணவர்களுக்கான சிங்கள மொழி அறிவு விருத்தி வேலைத்திட்டம் கடந்த 15.10.2019 தொடக்கம் 16.10.2019 வரை இரு நாட்கள் ஏறாவூக் கோட்ட மட் /மம / ஜிப்ரிய்யா வித்தியாலயத்தில் இடம் பெற்றது.

இதன் மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதல்களை மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.எஸ்.எம்.எம்.எஸ்.டொக்டர் உமர் மௌலான (SLEAS)  அவர்கள் வழங்கினார்கள். இணைப்பாளராக ஊசனார் (ADE) அவர்கள் செயற்பட்டார்கள்.

மேலும் இதன் வளவாளராக ஏ.எல்.எம்.றிஸ்வி (CGO)  அவர்கள் செயற்பட்டார். மேலே மாணவர்களுக்குரிய பயிற்சிகளையும், வழிகாட்டுதல்களினையும் றிஸ்வி அவர்கள் வழங்குவதோடு, மாணவர்கள் உற்சாகமாக செயற்படுவதனை நாம் காணலாம்.மேலே இச்செயலர்வின் சில காட்சிகளைக்காணலாம்.

சிறுவர் பாதுகாப்பு விழிப்பூட்டல் செயலமர்வு - 10.10.2019





மட்டக்களப்பு மத்தி வலயத்தின் ஏறாவூர் கோட்ட அல்அமான் வித்தியாலயத்தில் கடந்த 09.10.2019 தொடக்கம் 10.10.2019 வரை சிறுவர் பாதுகாப்பு தொடர்பான இரு நாள் செயலமர்வு நடைபெற்றது. இதில் வளவாளர்களாக வழிகாட்டல் ஆலோசனை ஆலோசகர் எம்.ஆர்.ஜவாத், தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர்களான எம்.பி.எம்.சித்தீக் மற்றும் ஏ.எல்.எம்.றிஸ்வி ஆகியோர் கலந்துகொண்டனர். இதன் போது மேற்படி பாடசாலையின் அதிபர் மற்றும் பயிற்சிகளை வழங்குகின்ற உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளை நாம் இங்கே காணலாம்.
ஆசிரியர் மத்திய நிலையத்தின் தரம் 2i ஆசிரியர்களுக்கான செயலமர்வு 30.09.2019





மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் தரம் 2i ஆசிரியர்களுக்கான செயலர்வு  கடந்த 30.09.2019அன்று இடம்பெற்றது. இதில் பல விடயங்கள் தொடர்பான வழிகாட்டுதல்கள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. இதன் வளவாளராக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர்திரு.எஸ்.எம்.எம்.எஸ்.டொக்டர் உமர் மௌலான (SLEAS),  கலந்து கொண்டார்கள். 

வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்களினால் கற்றல் பேறு தொடர்பான விளக்கம் வழங்கப்பட்டதோடு, பாடசாலைகளில் தற்போதைய நடைமுறைகள் தொடர்பான அறிவுரைகளும், ஆளுமை மிக்க மாணவர்களை கட்டியெழுப்புவதற்கு ஆசிரியர்களின் வகிபாகம் என்னவென்ற விடயங்கள் தொடர்பான விளக்கம் அளிக்கப்பட்டது.

தேர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்ட மாணவர்களை எவ்வாறு நாம் உருவாக்க முடியும் என்ற விடயங்கள் தொடர்பான வழிகாட்டுதல்களும் வலக்கல்விப் பணிப்பாளர் அவர்களினால் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.
காத்தான்குடிக் கோட்ட மட் /மம / ஸூஹதா  வித்தியாலயத்தின் தரம் 04 மாணவர்களுக்கான இரண்டாம் தேசிய மொழி சிங்கள பயிற்சிக் கருத்தரங்கு. 12.09.2019








மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் தரம் 04 மாணவர்களுக்கான சிங்கள மொழி அறிவு விருத்தி வேலைத்திட்டம் கடந்த 11.09.2019 தொடக்கம் 12.09.2019 வரை இரு நாட்கள் காத்தான்குடிக் கோட்ட மட் /மம / ஸூஹதா வித்தியாலயத்தில் இடம் பெற்றது.

இதன் மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதல்களை மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.எஸ்.எம்.எம்.எஸ்.டொக்டர் உமர் மௌலான (SLEAS)  அவர்கள் வழங்கினார்கள். இணைப்பாளராக ஏ.இப்றாஹீம் (ADE) அவர்கள் செயற்பட்டார்கள். 

மேலும் இதன் வளவாளர்களாக ஏ.எல்.எம்.றிஸ்வி (CGO)  அவர்களும், எம்.பி.எம்.சித்தீக் (CGO) அகியோரும் காணப்பட்டனர். மேலே மாணவர்களுக்குரிய பயிற்சிகளையும், வழிகாட்டுதல்களினையும் றிஸ்வி அவர்கள் வழங்குவதோடு, மாணவர்கள் உற்சாகமாக செயற்படுவதனையும்  இவ்வித்தியாலயத்தின் அதிபர் முகம்மட் முனீர் அவர்கள் இங்கு உரையாற்றுவதனையும் நாம் காணலாம்.

பெற்றோர்களும் இந்த செயற்பாட்டினை பாராட்டியமையோடு வலயக்கல்விப் பணிப்பாளருக்கு தமது நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டனர். தொடர்ந்தும் இந்த வழிகாட்டலை வழங்குமாறும் வலயக் கல்வி அலுவலக அதிகாரிகளிடம் பெற்றோர்களும் வேண்டிக்கொண்டனர். நாம் மேலே இச்செயலர்வின் சில காட்சிகளைக்காணலாம்.

Monday, October 7, 2019


புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் கிழக்கு மாகாணத்தில் முதலிடம்
கடந்த ஞாயிறு 06.10.2019 அன்று வெளியிடப்பட்ட புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்ற மானவர்களின் அடிப்படையில் கிழக்கு மாகாண ரீதியில் முதலிடத்தை மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் பெற்றுக்கொண்டுள்ளது.
இதுதொடர்பில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கல்விப்பணிப்பாளர் டாக்டர்.SMMS.உமர் மௌலானா கருத்து தெரிவிக்கையில்,இது ஒரு வரலாற்று சாதனை என்றும் கடந்த முறை(2018) 270 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்ததாகவும் இம்முறை 2019 ம் ஆண்டு 405 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்திருப்பதாகவும்,இதில் கோரளை மேற்கு கல்விக்கோட்டத்தில் 173 மாணவர்களும்,காத்தான்குடி கல்விக்கோட்டத்தில் 161 மானவர்களும், ஏறாவூர் கல்விக்கோட்டத்தில் 71 மாணவர்களும் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயமானது முதலிடத்தை பெற்றுக்கொள்வதற்கு வலயக்கல்வி அலுவலகமூடாக பல்வேறு விசேட செயற்திட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்த விசேட செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்த ஒத்துழைத்து உதவிய வலயக்கல்வி அலுவலகத்தின் கல்வி சார் உத்தியோகத்தர்கள்,கல்வி சாரா உத்தியோகத்தர்கள்,விசேடமாக பாடசாலைகளின் அதிபர்கள்,ஆசிரியர்கள்,பெற்றோர்களுக்கு வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்வதாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கல்விப்பணிப்பாளர் டாக்டர்.உமர் மௌலானா மேலும் தெரிவித்தார்.
தகவல் :- AGM.ஹகீம் (SLEAS) பிரதேச கல்விப் பணிப்பாளர். - காத்தான்குடி.


Tuesday, October 1, 2019

மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளரின் சர்வதேச சிறுவர் தின வாழ்த்துச் செய்தி - 2019


ஒக்டோபர் 1ம் திகதி 2019 இன்று சர்வதேச சிறுவர் தினம் உலகெங்கும் கொண்டாடப்படுகின்றது. இவ்வருடத்திற்கான சிறுவர் தின மகுட வாசகம் ''நட்பு சூழ சிறுவர்களுக்கு வெற்றியைப் பரிசளிப்போம்'' என்பதாகும்.

ஆனால் இன்று 13,00704 பேர் வரை குழந்தைத் தொழிலாளர்களாக காணப்படுகின்றனர்.

அவர்களில் 87,854 பேர் சிறுவர் தொழிலாளர்களாகவே வாழ்வதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தோட்டப்புறங்களைச் சேர்ந்த 2,321 சிறுவர்களும் சிறுவர் தொழிலாளர்களாக உள்ளனர்.

34,494 சிறுவர்கள் தொழிலில் அமர்த்தப்பட்டுள்ளதுடன் அவர்களில் 65,210 ஆண் சிறுவர்கள் ஆவர்.

சிறுவர் தினம் போன்றே இன்று முதியோர் தினமும் கொண்டாடப்படுகின்றது.


  • முதியோர்களுக்கு உரிய இடத்தை வழங்கும் நாள் எனும் தொனிப்பொருளில் முதியோர் தினம் இன்று கொண்டாடப்படுகின்றது.

தற்போது நாட்டில் 1,30,000 முதியோர் வாழ்வதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க 100 வயதைத் தாண்டிய 650 பேர் இலங்கையில் வாழ்கின்றனர்.

முதியோர் இல்லங்களில் அன்றி வீடுகளில் வசிக்கும் முதியோரின் எண்ணிக்கை 9000 இற்கும் அதிகம் என தேசிய முதியோர்களுக்கான செயலகம் தெரிவித்துள்ளது.

எனவே இத்தினத்தில் எமது  பாடசாலைகளில் கொண்டாடப்படும் இன்றைய சிறுவர் தின நிகழ்வுகள் சிறப்பான முறையில் நடைபெற வேண்டுமென மட்டக்களப்பு மத்தி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.எஸ்.எம்.எம்.எஸ்.டொக்டர் உமர் மௌலான (SLEAS) அவர்கள் தமது  பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக்கல்விப் பணிப்பாளர்கள், உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், பாட இணைப்பாளர்கள் , அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் சார்பாக தமது வாழ்த்துக்களைத் அன்பின் இனிய மாணவர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றார்கள்.

தகவல் ALM.றிஸ்வி - தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர். 

  தேசிய கல்வி நிறுவகத்தின் பாரம்பரிய மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் ஊடாக அரபு மொழிப் பாடத்திற்கான மொடியூல் தயாரிக்கும் செயற்திட்டத்திட...