Sunday, December 17, 2017

இலங்கை: உள்ளூராட்சி தேர்தல் - வேட்புமனு நிராகரிப்புகள் தொடர்பாக மஹிந்த அணி நீதிமன்றம் செல்கிறது?





இலங்கை சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகியவற்றினால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் சில நிராகரிக்கப்பட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுனவினால் சமர்ப்பிக்கப்பட்ட 6 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
பதுளை¸மஹரகம¸ மஹியங்கனை¸ பானந்துரை¸ அகலவத்தை மற்றும் வெலிகம ஆகிய பகுதிகளுக்கான வேட்பு மனுக்களே நிராகரிக்கப்பட்டுள்ளன.
ஆண் பெண் பால் நிலை தொடர்பான ஆவண குறைப்பாடே மஹரகம உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனு நிராகரிக்க காரணம் என தெரிவத்தாட்சி அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
மாவட்டத்திற்காக கட்சியினால் நியமிக்கப்பட்ட பொறுப்பான அதிகாரியினால் வேட்பு மனு சமர்ப்பிக்கப்படாமையே வெலிகம உள்ளுராட்சி மன்றத்திற்கான வேட்பு மனு நிராகரிக்க காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில்¸ பதியத்தலாவை மற்றுமு; தெஹியத்தகண்டிய ஆகிய உள்ளுராட்சி மன்றங்களுக்கான இலங்கை சுதந்திர கட்சியின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
அதே போன்று, அம்பாறை மாவட்டத்திற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு வேட்பு மனுக்கள் நிராகரிக்ககப்பட்டுள்ளன.
ஆலையடிவேட்பு மற்றும் சம்மாந்துறை ஆகிய உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுவே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

  தேசிய கல்வி நிறுவகத்தின் பாரம்பரிய மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் ஊடாக அரபு மொழிப் பாடத்திற்கான மொடியூல் தயாரிக்கும் செயற்திட்டத்திட...