Tuesday, December 26, 2017


தாஜ்மஹால் உலக அதிசயம் ஆனது எப்படி ?

'உலகின் ஏழு புதிய அதிசயங்கள்’ என்ற அறக்கட்டளை அமைப்பு, உலகம் முழுக்க ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது. அதன் முடிவுகளை,  2007 ஜூன் 7-ம் தேதி (07.07.07) அறிவித்தது. அதில் தாஜ்மஹாலும் இருந்தது. அதற்கு முன்பே தாஜ்மஹாலை உலகப் பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அமைப்பு அறிவித்தது.
உலக அதிசயங்கள் பட்டியலில் ஒரு நினைவுச் சின்னம் பரிசீலனையில் இடம்பெற அவை மனிதர்களால் கட்டப்பட்டிருக்க வேண்டும்; 2,000 ஆண்டுகளுக்குள் அதன் வயது இருக்க வேண்டும்; பாதுகாக்கப்பட்டு பொலிவுடன் திகழ வேண்டும் என நிறைய நிபந்தனைகள் இருந்தன.
ஏழு அதிசயங்களும் ஒவ்வொரு கருப்பொருளை மையப்படுத்துவதாக அமைந்திருந்தன. விடாமுயற்சிக்கு எடுத்துக்காட்டாக சீனப் பெருஞ்சுவரும், காதலுக்கான எடுத்துக்காட்டாக தாஜ்மஹாலும் தேர்வு செய்யப்பட்டன.
ஏ.எல்.எம்.றிஸ்வி - உளவளத்துணை தொழிவழிகாட்டல் அதிகாரி

1 comment:

  தேசிய கல்வி நிறுவகத்தின் பாரம்பரிய மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் ஊடாக அரபு மொழிப் பாடத்திற்கான மொடியூல் தயாரிக்கும் செயற்திட்டத்திட...