தாஜ்மஹால் உலக அதிசயம் ஆனது எப்படி ?
'உலகின் ஏழு புதிய அதிசயங்கள்’ என்ற அறக்கட்டளை அமைப்பு, உலகம் முழுக்க ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது. அதன் முடிவுகளை, 2007 ஜூன் 7-ம் தேதி (07.07.07) அறிவித்தது. அதில் தாஜ்மஹாலும் இருந்தது. அதற்கு முன்பே தாஜ்மஹாலை உலகப் பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அமைப்பு அறிவித்தது.
உலக அதிசயங்கள் பட்டியலில் ஒரு நினைவுச் சின்னம் பரிசீலனையில் இடம்பெற அவை மனிதர்களால் கட்டப்பட்டிருக்க வேண்டும்; 2,000 ஆண்டுகளுக்குள் அதன் வயது இருக்க வேண்டும்; பாதுகாக்கப்பட்டு பொலிவுடன் திகழ வேண்டும் என நிறைய நிபந்தனைகள் இருந்தன.
ஏழு அதிசயங்களும் ஒவ்வொரு கருப்பொருளை மையப்படுத்துவதாக அமைந்திருந்தன. விடாமுயற்சிக்கு எடுத்துக்காட்டாக சீனப் பெருஞ்சுவரும், காதலுக்கான எடுத்துக்காட்டாக தாஜ்மஹாலும் தேர்வு செய்யப்பட்டன.
ஏ.எல்.எம்.றிஸ்வி - உளவளத்துணை தொழிவழிகாட்டல் அதிகாரி
Thank u for the informations.
ReplyDelete