ஆரம்பக்கல்வி ஆசிரியர்களுக்கான திறன் விருத்திச் செயலமர்வு
Add caption |
Add caption |
கடந்த 29.12.2017 அன்று கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் ஆரம்பப்பிரிவு ஆசிரியர்களுக்கு இரண்டாம் மொழி சிங்களத்தினை மாணவர்களுக்கு இலகுவான முறையில் எவ்வாறு கற்பிக்க முடியும் என்ற வழிகாட்டல் கருத்தரங்கு பிறந்துரைச்சேனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதிக்க்கல்விப்பணிப்பாளர் திரு. இப்றாஹீம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இதில் ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர் திரு நவாஸ் அவர்களும் ஆசிரியர்களுக்கான செயற்பாடுகளை மேற்கொள்கின்றார்.
காத்தான்குடி ஆசிரிய மத்திய நிலையத்தின் உளவளத்துணை தொழில்வழிகாட்டல் உத்தியோகத்தரான திரு. ஏ.எல்.எம்.றிஸ்வி அவர்கள் ஆசிரியர்களுக்கு மாணவர்களின் சிங்கள மொழியினை இலகுவாக கற்பிப்பதற்கான உக்திகளை நாம் எவ்வாறு கையாளலாம் என்ற வழிகாட்டலினை வழங்கிக்கொண்டிருப்பதனைக் காணலாம்.
No comments:
Post a Comment