Tuesday, January 30, 2018

குழந்தைகளின் உயிரோடு விளையாடும் மலிவு விலை பிளாஸ்டிக் பொருட்கள்




ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்படும் பொம்மைகளில் சமீபத்திய பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்பதால் அவற்றை பயன்படுத்தும் குழந்தைகளுக்கு உடல்நலம் சார்ந்த ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
தென்மேற்கு இங்கிலாந்திலுள்ள குழந்தை வளர்ப்பகங்கள், பயன்படுத்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையகங்கள் மற்றும் வீடுகளிலுள்ள 200 பயன்படுத்தப்பட்ட பொம்மைகளை கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது குறித்து தெரியவந்துள்ளது.
ஐரோப்பிய சுகாதார நிறுவனங்களினால் ஆபத்தை விளைவிக்க கூடிய அளவாக குறிப்பிடப்பட்டுள்ளதைவிட அதிகமான அளவு ஒன்பது வகையான ரசாயனங்களையும் ஆய்விற்குட்படுத்தப்பட்ட இருபது பொம்மைகள் கொண்டிருந்ததது.
ஆனால், இது விளைவிக்கும் ஆபத்தை பற்றி மதிப்பிடுவது கடினமானது என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
"பல ஆண்டுகாலத்திற்கு முன்னர் வரை தயாரிக்கப்பட்ட பொம்மைகளில் இதுபோன்ற ஆய்வுகள் செய்யப்படவில்லை" என்று இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட ப்ளைமௌத் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆண்ட்ரூ டர்னர் கூறுகிறார்.
நீண்டகால நச்சு
ஆய்விற்குட்படுத்தப்பட்ட பொம்மைகளின் பாகங்கள் கார்கள் முதல் ரயில்கள் வரை எவற்றிலிருந்தெல்லாம் எடுத்து பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை அறிவதற்காக எக்ஸ்-ரே ஃப்ளோரசன்ஸ் என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டதாக சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் என்ற சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பொம்மைகளுமே குழந்தைகளினால் விழுங்கப்படும் அளவுக்கு மிகவும் சிறியளவில் இருந்தது.
குழந்தைகளின் உடல்நலனுக்கு கேடு விளைவிக்கக் கூடிய ஆண்டிமோனிக், பேரியம், ப்ரோமைன், காட்மியம், குரோமியம், லெட் மற்றும் செலினியம் உள்ளிட்ட அபாயகரமான கூறுகள் அந்த பொம்மைகளில் அதிக செறிவில் இருப்பதை கண்டறிந்தனர்.
இந்த ரசாயனங்கள் நீண்ட காலத்திற்கு குறைந்த அளவில் குழந்தைகளிடமே இருக்குமானால் அது மிகப் பெரிய பாதிப்பை உண்டாக்கக் கூடும்,
குழந்தைகள் தங்கள் வாயில் பொம்மைகளை வைத்திருந்தால், இந்த ரசாயனங்கள் அதிக அளவுக்கு வெளிப்படும்.
பொம்மைகளில் பயன்படுத்தப்படும் ரசாயனங்களுக்கான அளவாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பொம்மைகளுக்கான நெறிமுறை ஆணையம் குறிப்பிட்டுள்ளதைவிட அதிகமான அளவு ரசாயனங்கள் ஆய்விற்குட்படுத்தப்பட்ட 26 பொம்மைகளில் 10ல் இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக ப்ரோமைன், காட்மியம் அல்லது லெட் போன்றவை இருந்ததாக தெரியவந்துள்ளது.
குறிப்பாக சிவப்பு, மஞ்சள் அல்லது கருப்பு பிளாஸ்டிக்குகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்த கூடியவை.
"ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பொம்மைகள் குடும்பங்களுக்கு ஒரு கவர்ச்சியான விருப்பமாக இருக்கிறது. ஏனெனில், அவை நேரடியாக நண்பர்களிடமோ அல்லது உறவினரிடமிருந்தோ மலிவான விலையிலோ அல்லது தொண்டு விற்பனையகங்கள் , வெளிச்சந்தைகள் அல்லது இணையத்தளங்கள் மூலமாகவோ பெற முடியும்" என்று ஆராய்ச்சியாளரான டர்னர் கூறுகிறார்.
புதிய கட்டுப்பாடுகள் பழைய பொம்மைகளை மறுசுழற்சி செய்வதையோ அல்லது மறுவிற்பனை செய்வதையோ தடுக்கவில்லை என்று அவர் கூறுகிறார்.
"சிறிய மற்றும் வாயில் எளிதாக வைத்துக்கொள்ளக்கூடிய மற்றும் பிரகாசமான நிறமுடைய பிளாஸ்டிக் பொம்மைகள் அல்லது கூறுகளிலுள்ள அபாயங்களை நுகர்வோர் நன்கு அறிந்திருக்க வேண்டும்" என்றும் "இல்லையெனில் அவை குழந்தைகளின் உடல்நலனுக்கு அதீத கெடுதலை இந்த விலை குறைவான மற்றும் வசதிகரமாக இருப்பதாக தோன்றும் இந்த பொம்மைகள் விளைவிக்கும் வாய்ப்புள்ளது" என்றும் அவர் மேலும் கூறுகிறார்.

அபாயத்தை அதிகரிக்கிறது
"ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அவை உற்பத்தி செய்யப்படும்போது அளிக்கப்பட்ட பாதுகாப்பு உத்தரவாதத்தை அளிக்காது" என்று சார்ட்டர்ட் டிரேடிங் ஸ்டாண்டர்ட்ஸ் இன்ஸ்டிடியூட்டை சேர்ந்த மார்க் கார்டினர் கூறுகிறார்.
"மிகவும் பழைய பொம்மைகளை குழந்தைகளுக்கு கொடுக்கும் பெற்றோர்கள் அதன் தரத்தில் காலப்போக்கில் மோசமான மாற்றம் நிகழ்ந்து ஏற்படுத்தக் கூடிய பிரச்சனைகள் குறித்து அறிந்திருக்க வேண்டும்" என்று அவர் கூறுகிறார்.
"தங்களது குழந்தைகளின் மீது அக்கறை கொண்டுள்ள பெற்றோர்கள் இதுபோன்ற தீங்கு விளைவிக்கக்கூடிய ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பொம்மைகளை குழந்தைகளிடம் அளிக்காமலிருப்பதே நல்லது" என்று கார்டினர் கூறுகிறார்.

Thursday, January 25, 2018

பிள்ளைகளின் எதிர்காலம் அவர்களின் பெற்றோரின் கைகளிலேயே தங்கியுள்ளது.

அன்­றாட உலக வாழ்­வில் பெற்­றோர் பெறும் தலை­சி­றந்த பேறு ‘‘அறி­வு­டைய நன்­மக்­கட் பேறா­கும்.’’ அறி­வைக் கற்­ப­தால்தான் நாம் அத­னைப் பெற­லாம். பெற்­றோ­ரி­ட­மும், குழந்­தை­யி­ட­மும் இயல்­பா­கவே அன்பு இருக்­கின்­றது. பிள்­ளை­யைப் பாது­காக்க வேண்­டும் என்ற பாது­காப்பு உணர்வை இயற்கை பெற்­றோ­ரின் முனை­யில் இயல்­பா­கவே கிர­கித்து வைத்­துள்­ளது. ஆனால் பெற்­றோர்­க­ளைப் பாது­காக்க வேண்­டும் என்ற உணர்வு சில பிள்­ளை­க­ளி­டம் இல்லை. எனவேதான் ‘‘பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு’’ என பழ­மொழி பழைய காலத்­தில் தோன்­றியது என­லாம்.

இளமையில் கல்வி

கல்வி கற்­ப­தற்கு உரிய பரு­வம் இள­மைப் பரு­வ­மா­கும். இத­னால்தான் ‘‘இள­மை­யில் கல்வி சிலை­யில் எழுத்து’’ என்­பர். இள­மைப் பரு­வம் வாழ்க்­கை­யின் ஆரம்பப் பரு­வ­மா­கும். குடும்ப வளம் பெற்று சிறப்­பு­டன் திக­ழ­வும், முது­மைப் பரு­வத்தை அஞ்­சாது எதிர்­கொள்­ள­வும் உறு­து­ணை­யா­வது இள­மைப் பரு­வத்­தில் நாம் பெறும் கல்­வி­யா­கும். கற்­பதை குறை­க­ளின்­றித் தௌிவா­கக் கற்க வேண்­டும் என்றார் வள்­ளு­வர்
‘‘கற்க கச­ட­றக் கற்­பவை கற்­ற­பின்  நிற்க அதற்­குத் தக’’ (குறள் – 391)

கற்க வேண்­டிய நூல்­களை ஒரு­வன் குற்­றம் அறக் கற்க வேண்­டும். கற்ற பின்பு அந்­தக் கல்­விக்­குத் தகுந்து ஒழுக வேண்­டும் என திருக்­கு­ற­ளில் கல்வி அதி­கா­ரத்­தில் தன் ஈர­டி­க­ளால் மிகத் தௌிவா­க வள்ளுவர் கூறியுள் ளார். ஒரு­வன் கல்வி அறி­வு­டை­ய­வன் என்­ப­தன் சாட்­சி­யாக அமை­வது அவ­னது அடக்­க­மான பண்­பா­கும். இத­னால்­தான் அடக்­கம் ஒரு மனி­த­னுக்­குத் தரும் பரிசு தேவ­லோ­கத்­தில் வாழும் பேற்­றைத் தரும் என்­றும் அடங்­காமை  வாழ்­வில் ஔிம­ய­மற்ற, சிறப்­பற்ற, துன்­ப­மான வாழ்­வையே தரும் என்­றும் பொய்­யா­மொ­ழிப் புல­வர் கூறி உள்­ளார். எனவே இளம் தலை­மு­றை­யி­ன­ரான மாண­வர்­கள் கற்­றுக் கொள்ள வேண்­டிய நற்­பண்­பு­க­ளில் அடக்­கம் பணிவு, கீழ்­ப­டி­தல் மிக முக்­கி­ய­மானவை.

  மானிட வாழ்­வில் பெற்­றோர் பெறும் மிகப்­பெ­ரிய செல்­வம் ‘‘அறி­வ­றிந்த மக்­கட் பேறே’’ என வள்­ளு­வர் திருக்­கு­ற­ளில் மக்­கட் பேறு அதி­கா­ரத்­தில் (குறள் – 61இல்) குறிப்­பிட்­டுள்­ளார். பிள்ளை பெற்று விட்­டால் மட்­டும் போதாது. அவர்­க­ளைப் பேணி வளர்க்க வேண்­டும். சொற் கேளாப் பிள்­ளை­யால் குலத்­துக்கு ஈனம்.

காலை எழுந்தவுடன் படிப்பு
‘‘எல்­லாக் குழந்­தை­யும் நல்ல குழந்­தை­தான் மண்­ணில் பிறக்­கை­யிலே அவர் நல்­ல­வ­ரா­வ­தும் தீய­வ­ரா­வ­தும் அன்னை வளர்ப்­பி­னிலே’’ என்­கி­றது பாடல். தொட்­டி­லில் பழ­கிய பழக்­கம் தான் சுடு­காடு மட்­டும், ஐந்­தில் வளை­யா­தது ஐம்­ப­தில் வளை­யாது. எனவே பெற்­றோர்­கள் பிள்­ளை­க­ளுக்கு காலை எழுந்­த­வு­டன் படிப்பு பின்பு கனிவு கொடுக்­கும் நல்ல பாட்டு, மாலை முழு­தும் விளை­யாட்டு என்ற பழக்­கத்தை வழக்­கப்­ப­டுத்­திக் கொண்­டு­வர வேண்­டும்.

 பிள்­ளை­களை தண்­டனை மூலம் திருத்த பெற்­றோரோ, ஆசி­ரி­யர்­களோ முற்­ப­டக்­கூ­டாது. அன்­பி­னால் அறிவு கூறி, கனி­வாகத் திருத்த முற்­பட வேண்­டும். மிரட்டுப­வர்­கள் மற்­றும் தண்­டனை கொடுப்­போர் மீது பிள்­ளை­கள் அன்பு செலுத்­தாது. கடந்த 30 வரு­டங்­க­ளுக்கு மேலாக நடைபெற்ற போரால் எமது நாட்­டில் கல்­வி­யின் முன்­னேற்­றம் 50 வரு­டங்­கள் பின்­நோக்­கிச் சென்று விட்­டது என்று கூற­லாம். இன்­றைய பெற்­றோ­ரின் கடமை முந்­தைய கால எம் கல்­வி­யின் தரத்தை மீண்­டும் கட்டி, எழுப்­பு­வ­தென சப­தம் செய்ய வேண்­டும்.

கல்­விக்­கா­கவே எமது பெற்­றோர்­கள்­ அன்­றி­லி­ருந்து இன்று வரை முத­லீடு செய்து வரு­கின்­ற­னர். இத­னால் பெறும் வரு­மா­னங்­க­ளைக் கொண்டே தமது வாழ்க்­கையை சீராக நடத்­து­கின்­ற­னர். எனவே எமது வீழ்ச்­சி­கள் எழுச்­சி­யின் முதற்­படி. எனவே எமது எதிர்­கால சந்­த­தி­யி­னரை, எதிர்­கா­லத் தலை­வர்­களை உரிய முறை­யில் வழிப்­ப­டுத்தி நல்­வ­ழிக்கு கொண்டு செல்ல வேண்­டி­யது பெற்­றோர்­க­ளி­ன­தும், பாது­கா­வ­லர்­க­ளி­ன­தும் காலத்­தின் கட்­டா­ய­மான கட­மை­யா­கும்.

இன்று வீடு­க­ளில் உள்ள இணைய த் தளங்­க­ளும், தொலைக்­காட்­சி­க­ளும், அலை பே­சி­யும், கம­ராக்­க­ளும் மற்றும் வௌ்ளித் திரை­க­ளும் அதில் காண்­பிக்­கப்­ப­டும் நிகழ்ச்­சி­க­ளும் சில பெற்­றோர்­க­ளும் பிள்­ளை­க­ளும் வௌியில் சென்று கெடும் வாய்ப்பை நிறுத்தி வீட்­டில் இருந்தே கெடும்­படி செய்­துள்­ளன. எனவே சமூக சீர்­கே­டான நிகழ்ச்­சி­களை பெற்­றோரோ, பிள்­ளை­களோ பார்க்­கக் கூடாது. மாண­வர்­களுக்கு அலைபே­சிப் பாவ­னையை முக்­கி­ய­மான தேவைக்­கன்றி மற்­றைய தேவை­க­ளுக்கு பாவிக்க பெற்­றோர் அனு­ம­திக்­கக்­கூ­டாது. தன் பிள்ளை அறி­வில் விற்­பன்­ன­ராகி, பெரி­யோ­ரி­டம் சான்­றோன் என்ற பெயர் பெற வேண்­டும் என்­ப­தையே எந்­தப் பெற்­றோ­ரும் விரும்­பு­வர்.
‘‘ஈன்ற பொழு­திற் பெரி(து)உவக்­கும் தன் மக­னைச் சான்­றோன் எனக் கேட்ட தாய் (குறள் – 69)
இத­னையே வள்­ளு­வ­ரும் மக்­கட் பேறு என்ற அதி­கா­ரத்­தில் மிக அழ­கா­கக் குறிப்­பி­டு­கின்­றார். பிள்­ளை­க­ளுக்கு தண்­டனை வழங்­காது, பிள்­ளை­யைத் தாழ்த்­திப் பேசாது நல்ல அறி­வா­ளி­யாக வர பெற்­றோர் வளர்க்க வேண்­டும். பிழை கண்டு பிடிப்­ப­தும், குற்­றம் சொல்­வ­தும் தமது சொந்த வழக்­க­மாகி விட்­டார்­கள் பெற்­றோர். இந்த நிலை மாற­வேண்­டும்.

பிள்ளைகளின் திறமைகள்
நல்­ல­வற்­றையே பெற்­றோர் செய்து நல்­ல­வற்­றையே பிள்­ளை­க­ளி­டம்  எதிர்­பார்த்து நல்ல பழக்­கத்­தையே கற்­றுக் கொடுக்க வேண்­டும்.
பொது­வா­கப் பார்க்­கு­மி­டத்து பிள்­ளை­க­ளின் திற­மை­கள் எல்­லாம் முழு­மை­யான மலர்ச்சி பெற்று வளர்­வ­தற்கு பெற்­றோ­ரி­னது அன்­பும் ஆத­ர­வும் வழி­காட்­ட­லும் மிக­மிக அவ­சி­யம். அன்­பும், ஆத­ர­வும்  எல்லை கடக்­கு­மா­னால் அமிர்­தம் நஞ்­சா­வது போன்று பிள்­ளை­யின் தன்­னம்­பிக்­கை­யைக் குறைத்து பாத­க­மான விளை­க­ளைப் பிள்­ளை­யின் வாழ்­வில் ஏற்­ப­டுத்தி விடும்.
அப்­ப­டிப் போக­வி­டா­மல் தம்­பிள்­ளை­களை விருப்­பம்­போல நட­மா­ட­வும் எண்­ணங்­களை வௌியி­ட­வும் சுதந்­திரம் கொடுக்க வேண்­டும். பெற்­றோர்­கள் முத­ லில் வாழ்க்­கையை முன்­மா­தி­ரி­யாக்கி இலக்­கி­யப் பற்­று­டன்  அமை­தி­யாக, மகிழ்ச்­சி­யாக நல்ல முறை­யில் அமைத்­துக் கொண்­டால் அதுவே குழந்­தைக்கு எடுத்­துக் காட்­டா­கக் கல்­வியை சிறந்த முறை­யில் கற்க அமை­யும்.

பிள்ளைகளுக்கு மதிப்பு
பிள்­ளை­கள் அவர்­க­ளது வய­துக்­கேற்ப சிந்­தனை செய்­யும் ஆற்­றல் உண்டு. ஆனால் அதற்கு வேண்­டிய வாய்ப்­பை­யும் சுதந்­தி­ரத் தையும் பெற்­றோர் ஏற்­ப­டுத்­திக் கொடுக்க வேண்­டும். பிள்­ளை­க­ளு­டைய கருத்­து­க­ளுக்கு மதிப்­புக் கொடுக்க வேண்­டும். பிள்­ளை­யின் மனப்­போக்கு அதன் வளர்ச்­சிக்கு ஏற்­ற­ப­டியே மலர்ச்சி அடைய அனு­ம­தித்­தாலே பெரி­ய­வ­னா­கின்­ற­போ­தும் எண்­ணங்­கள் சரி­யாக மலர்ச்சி அடை­யும்.

புதிய கல்­வித் திட்­டத்­தால் பழைய பாடக் கல்­வித் திட்­டத்­தில் படித்த பெற்­றோ­ரில் பலர் தங்­கள் பிள்­ளை­க­ளுக்கு வீட்­டில் பாடல் சொல்­லிக் கொடுக்க முடி­யா­மல் இருக்­கின்­றார்­கள். இருந்­தும் பிரத்­தி­யேக வகுப்­புக்­க­ளுக்கு இய­லு­மா­ன­வரை அனுப்பி தங்­க­ளு­டைய உடம்பை உருக்கி படிக்க வைக்­கின்­றார்­கள்.

நாட்­டில் உயர்ந்­த­வ­ராக வர­வேண்­டும் என்­பதே எந்­தப் பெற்­றோ­ரி­ன­தும் விருப்­பம். எனவே நாட்­டின் எதிர்­கா­லத்­தின் தலை­வர்­க­ளாக வர­வேண்­டிய மாண­வர்­கள் ஆசி­யர்­க­ளுக்­கும் பெற்­றோர்­க­ளுக்­கும் பெரி­யோர்­க­ளுக்­கும் மதிப்­ப­ளித்து கல்வி என்­னும் பயி­ரில்  முழு­மை­யான இலக்கினை அடைய வேண்டுமென இறைவனை பிராத்திக்கின்றேன்.

Wednesday, January 24, 2018


காத்தான்குடி ஹிழுரிய்யா வித்தியாலயத்தின் தரம்01 மாணவர்களை  வரவேற்கும் நிகழ்வுகள்





நாடளாவிய  ரீதியில் தரம் 01 மாணவர்களை 2018ம் ஆண்டின் கற்றல் நடவடிக்கைக்காக இணைத்துக்கொள்ளப்பட்டனர்.  இதில் கலந்துகொண்ட பாடசாலையின் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் இவ்வித்தியாலய அதிபர் எஸ்.ஐ.யாஸிர் அறபாத் ஆகியோரை ஆசிரியர், மாணவர்கள் அழைத்துச்செல்வதனையும் 

தரம் 01 மாணவர்களை பாடசாலையின் தரம் 02 மாணவர்கள் மலர் மாலை அணிவித்து மகிழ்ச்சியுடன் அழைத்துச் செல்வதனையும் நாம் இங்கு காணலாம்.

கற்பித்தலும் கற்றலும்

கற்பித்தலும் கற்றலும் பல்வேறு காரணிகளை உள்ளடக்கிய ஒரு நிகழ்வாகும். இக்காரணிகள் கற்பவர் தன் இலக்கு நோக்கி செல்லும் போதும், விஷயங்களைத் தெரிந்துகொள்ளும்போதும், பழக்கவழக்கங்கள், கல்வி கற்றல் மூலம் அடையும் திறன்கள் முதலியவற்றில் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக அமைந்துள்ளது.
கடந்த நூற்றாண்டுகளில் கல்வி பற்றி பல்வேறு வித பார்வைகள் இருந்தன. கல்வி என்பது அறிவு சார்ந்தது (கற்றல் மூளையின் செயல்திறனால் நிகழ்கிறது) அல்லது கல்வி வளர்ச்சி சார்ந்தது (கற்கும் அனுபவத்தால் அறிவு ஏற்படுகிறது) என்ற இருவேறுவித பார்வைகள் இருந்தது. இவ்விரு கொள்கைகளை பிரித்துப் பார்க்காமல் ஒன்றிணைத்து பார்த்தோமானால் கற்றல் முறையில் பல்வேறு வாய்ப்புகள் இருப்பதை உணரலாம். இவற்றை ஒருங்கிணைக்கும் போது பல்வேறு பிற காரணிகளையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அவற்றில் சில - அறிவுத்திறன், கற்கும் முறை, பலதரப்பட்ட தனித்திறன்கள், சிறப்பு தேவை உள்ளவர்கள் மற்றும் பல்வேறு கலாச்சார பின்னணி கொண்டவர்களின் கல்வி கற்கும் முறை.

கட்டுக்கோப்பு - திறனாளர் கொள்கை

கட்டுக்கோப்புத்திறன் கொள்கையில் மாணவர்கள் தாங்கள் ஏற்கனவே பெற்ற கல்வி, கருத்துகள் மற்றும் திறன்களை அடிப்படையாகக் கொண்டு கல்வி முறை அமைகிறது. தாங்கள் ஏற்கனவே அறிந்தவைகளோடு  புதிய தகவல்களையும் சேர்த்து புதிய புரிதல்களை உருவாக்குகிறார்கள்.
இந்த முறையில் கற்பிக்கும் ஆசிரியர் மாணவர்களுக்கு பயிற்சிகளைக் கொடுக்கிறார். அதனை எவ்வாறு அணுகுகிறார்கள் என்பதை கவனித்து தக்க ஆலோசனை வழங்கி புதிய முறைகளில் சிந்திக்கத் தூண்டுகிறார். எளிய தகவல்களைச் சொல்லி அதில் மாணவர்களின் எண்ணங்கள் தூண்டப்படும் இம்முறையில் கல்வி அறிவு சிறிது சிறிதாக அதிகரிக்கப்படுகிறது. வயது முதிர்ந்தோர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினர்க்கும் இம்முறை ஏற்றதாகும்.
கண்ணோட்டம்
ப்ரூனரின் கோட்பாடுகளின்படி கற்றல் என்பது ஒரு சுறுசுறுப்பான நிகழ்வு. மாணவர்கள் தான் ஏற்கனவே கற்றுக்கொண்டவைகளில் இருந்து புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்கின்றனர் என்பது தான் இக்கொள்கையின் சாராம்சம். கொடுக்கப்பட்ட தகவலை அலசி, ஆராய்ந்து, கோட்பாடுகளை உருவாக்கி அறிவுசார் முடிவுகளை மாணவர்கள் எடுக்கின்றனர். தகவலின் அர்த்தம் புரிந்து அதை வகைப்படுத்துகின்றனர். இது கொடுக்கப்பட்ட தகவலுக்கு அடுத்த நிலையை சிந்திக்க வாய்ப்பளிக்கிறது.
பயிற்று முறையைப் பொறுத்தவரையில் மாணவர்கள் அவர்களாகவே கொள்கைகளைக் கண்டுபிடிக்கும்படி பயிற்சியாளர் ஊக்கப்படுத்த வேண்டும். இருவரும் ஆக்கப்பூர்வ உரையாடல்களில் அதிகம் ஈடுபடவேண்டும்
இங்கு ஆசிரியரின் பணி என்பது பாடங்களை மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் படி மாற்றம் செய்வதுதான். பாடத்திட்டம் ஒரு சுருள் போல் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் தாங்கள் ஏற்கனவே கற்றுக்கொண்டவைகளிலிருந்து புதியவற்றை அறிவார்கள்.
பயிற்று முறை கீழ்கண்ட நான்கு கூறுகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.:
(1) கற்றல் முறை பற்றிய பார்வை.
(2) பாடத்திட்டம் எளிதில் புரியும் வண்ணம் அமைந்திருக்க வேண்டும்.
(3) எந்த வரிசையில் கொடுத்தால் மாணவர்களுக்கு எளிதில் விளங்கும் என்பதை அறிதல்
(4) பாராட்டுதல்கள் & தண்டனைகளின் தன்மை மற்றும் அவற்றிற்கிடையேயான கால இடைவெளி.
எளிமை, புதிய கோணத்தில் வழங்குதல் அதிக தகவல்களை உள்ளடக்குதல் முதலியவை மூலம் கல்வியறிவை வழங்குதலில் புதிய வழிமுறைகள் காணப்பட வேண்டும்.
கற்றல் முறைகளில் சமூக மற்றும் கலாச்சாரத்தின் தாக்கத்தைப் பற்றி தன் சமீபத்திய நூல்களில் (1986,1990,1996) ப்ரூனர் குறிப்பிடுகிறார்.
பயன்பாடு
ப்ரூனரின் இந்த பயிற்று முறைக்கான கோட்பாடு தனிமனித அறிவுத்திறனை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் வளர்ச்சி பற்றிய ஆராய்ச்சியுடன் இக்கொள்கை தொடர்புடையது. ப்ரூனரின் இக்கருத்துகள் அறிவியல் மற்றும் கணிதம் கற்றல் முறை தொடர்பான கருத்தரங்கு மூலம் பெறப்பட்டது. சிறு குழந்தைகளுக்கான கணித, சமூக அறிவியல் பாடங்கள் வாயிலாக ப்ரூனர் தன் கொள்கைகளை விளக்குகிறார். ப்ரூனர், குட்நவ், ஆஸ்டின் (1951) ஆகியோர் எழுதிய புத்தகத்தில் பகுத்தறியும் திறன் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. குழந்தைகள் மொழியைக் கற்றுக்கொள்ளுதல் பற்றியும் ப்ரூனர் குறிப்பிடுகிறார்.
கொள்கைகள்
1. மாணவன் ஆர்வத்துடனும் எளிதில் புரிந்து கொள்ளும்படியும் பாடக்குறிப்புகள் அமைக்கப்பட வேண்டும்.
2. குறிப்புகள் எளிதில் புரியும்படி இருக்கவேண்டும்.
3. மேலும் பல தகவல்களை அறிய செய்யும் வண்ணம் விடுபட்ட செய்திகளை அறியும்படி அமைக்கவேண்டும்.



செய்முறைக் கற்றல் கொள்கை சி.ரோஜெர்ஸ்

செய்முறைக் கற்றல் கொள்கை மக்களின் கல்வி வளர்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட பல அடுக்கு மேம்பாட்டு கல்வி கற்றல் முறையைக் கொடுக்கிறது. செய்முறைக் கற்றலில் நேரடி அனுபவத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதுதான் மற்ற முறைகளிலிருந்து இதனை வேறுபடுத்திக் காட்டுகிறது.  நேரடி அனுபவம் என்ற ஒன்றுதான் புலன்களுக்கு முக்கியத்துவம் தரும் பகுத்துணர்ந்து கற்றல் முறையிலிருந்து இம்முறையை வேறுபடுத்திக் காட்டுகிறது.
நேரடி அனுபவத்தின் வாயிலாக அறிவு பறிமாற்றம் நிகழ்வதுதான் செய்முறைக் கற்றலின் சிறப்பு
முன்னுரை
ரோஜெர்ஸ் கற்றலை இருவகையாகப் பிரிக்கிறார் -
பகுத்துணர்ந்து கற்றல் (அர்த்தமற்றது) & செய்முறைக் கற்றல் (முக்கியமானது). முதலில் உள்ளது பாட அறிவு (அகராதி சொற்களை அறிதல், கணித வாய்ப்பாடு அறிதல்) தொடர்பானது. இரண்டாவது பயன்பாட்டு  அறிவு (காரை ரிப்பேர் செய்ய தேவையான கார் இன்ஜினைப் பற்றிய அறிவு). சோதனைவழி கற்றல் முறையில் கற்பவரின் தேவையும் ஆர்வமும் கருத்தில் கொள்ளப்படுகிறது. இம்முறையின் பண்புகளை ரோஜெர் கீழே பட்டியலிடுகிறார்.-  தனிநபரின் ஈடுபாடு, சுயமாக செய்தல், கற்பவராலேயே மதிப்பிடப்படுதல், கருத்துகளை அதிகம் தக்க வைத்துக்கொள்ளல்.
இம்முறையில் கற்றல் என்பது தனிநபரின் மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் இணையாக நிகழ்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் இயற்கையாகவே கற்றுக்கொள்ளும் திறன் உள்ளது. எனவே ஒரு ஆசிரியரின் பங்கு அவற்றை நெறிபடுத்துவதே ஆகும்.  அவைகளில் சில :
((1) கல்வி கற்க ஏற்ற சூழலை உருவாக்குதல்,
(2) கற்றலின் நோக்கத்தைப் புரியவைத்தல்,
(3) கல்வி உபகரணங்கள் மற்றும் பிற எழுதுபொருட்களை கிடைக்கும்படி செய்தல்
(4) அறிவுசார் மற்றும் உணர்வு சார் கல்விக்கூறுகளை சமமாக வழங்குதல்
(5) மாணவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தாமல் அவர்களிடம் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ளுதல்.
கீழ்க்கண்ட நிலைகளில் கல்வி கற்றலிற்கு ஏற்ற சூழல் அமையும்:
(1) மாணவர்கள் முழு ஈடுபாட்டுடன் கல்வி கற்கிறார்கள் மற்றும் அதன் போக்கிலும் அமைப்பிலும் அவர்களின் பங்களிப்பு உண்டு.
(2) செயல்முறை, சமூக, தனிமனித மற்றும் ஆராய்ச்சி சார்ந்த பிரச்சனைகளுக்கு இடையே நேரடி முரண்பாட்டின் அடிப்படையில் இம்முறை அமைந்துள்ளது.
(3) சுய-மதிப்பீடு தான் இங்கு பிரதான மதிப்பிட்டு முறை. கற்றலின் முக்கியத்துவத்தையும் மாற்றத்திற்கு தயாராக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் ரோஜெர் குறிப்பிடுகிறார்.
அமலாக்கம்
செய்முறைக் கற்றல் முறை மாணவனின் தேவைகளையும் ஆர்வத்தையும் இனங்கண்டு அவனை அதிக ஈடுபாட்டுடன் கற்கச் செய்கிறது. இங்கு தன்னார்வம் மற்றும் சுயமதிப்பீட்டுத் திறன் அவசியம். இம்முறை சிறப்பாக செயல்பட செயல்திட்டம், குறிக்கோள் நிர்ணயித்தல் முதல் சோதனைகள் மூலம் இலக்கினை அடைந்துவிட்டோமா என்பதை அறியும் வரை அனைத்து பாகங்களும் செம்மையாக செய்யப்பட வேண்டும். இவ்வகை செயல்முறைகள் புதியவற்றை அறியவும், புதிய கோணங்களில் சிந்திக்கவும் உதவும்
நாம் குழந்தையாக இருக்கும்போது விளையாடிய விளையாட்டுகள் நினைவிருக்கிறதா? இந்த எளிய விளையாட்டுகள் குழு நிர்வாகம், தலைமைப்பண்பு உள்ளிட்ட கல்வி மற்றும் சமூகத் திறன்களை நமக்கு சொல்லிக்கொடுத்திருக்கின்றன. செய்முறை வழிக் கற்றல் முறையைப் போலவே இவை பிரபலமடையக் காரணம் இவற்றில் உள்ள வேடிக்கை சமாச்சாரங்கள்தான். வேடிக்கையான முறையில் கல்வி கற்றால் அவை அதிக நாட்களுக்கு நம் நினைவில் நிற்கும். பெரும்பாலான கல்வியாளர்கள் செய்முறைக் கற்றலின் மகத்துவத்தை உணர்ந்துள்ளனர். நகைச்சுவை கலந்த வேடிக்கையான கல்விச் சூழல் கற்றலை அதிகம் மேம்படுத்துகிறது.
ஒவ்வொரு தனி நபரும் நேரடியாக ஈடுபடுவதால் செம்மையான புரிதலுக்கும் அதிக நாள் தக்கவைத்தலுக்கும் உதவும்.
கொள்கைகள்
1. மாணவருக்கு பாடத்தில் தனிப்பட்ட ஆர்வம் இருந்தால் மட்டுமே கல்வி பயிலுதல் நிகழும்.
2. வெளிப்புற தாக்கம் குறைவாக இருக்கும்போது தனி மனிதன் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் கல்வி எளிதில் ஏற்றுக்கொள்ளப்படும்.
3. தனி மனிதன் மீது அதிக தாக்கம் இருக்கும் போது  கல்வி கற்றல் விரைவாக நிகழும்.
4. தானாக கற்கும் கல்வி அறிவு நீண்ட நாள் நிலைத்து அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.
பகுத்துணர்ந்து கற்றல்
கவனித்தல், குறிப்பெடுத்தல் மற்றும் பிறர் போலச் செய்வது மூலமாக மனிதர்கள் சிறப்பாக கல்வி பெற இயலும். பகுத்துணர்ந்து கற்றல் என்பது கேட்டல், கவனித்தல், தொடுதல் அல்லது சோதனை வழி அறிதல் மூலம் நிகழ்கிறது. இம்முறையில் பிறர் செய்வது போல தானும் செய்வது மட்டுமல்லாமல் பல வழிகளில் அறிவு பெற வாய்ப்புள்ளது. இதைப்பற்றி இணையதளங்களில் படிப்பதால் மட்டும் இதன் முக்கியத்துவத்தை உணரமுடியாது. பகுத்துணர்ந்து கற்றல் என்பது மூளை அல்லது புலன் உறுப்புகள் வாயிலாக கல்வி அறிவு பெறுவதைக் குறிக்கிறது. ஒருபொருளைப் பற்றிய மனக் கண்ணோட்டமும் தகவல் பரிமாற்றமும் பகுத்துணர்ந்து கற்றல் முறையின் அங்கங்களாகும்.

பகுத்துணர்ந்து கற்றல் எவ்வாறு நிகழ்கிறது?

புலன் வழி கற்றல் முறையில் மாணவர்கள் கேட்டல், கவனித்தல், தொடுதல், வாசித்தல் அல்லது சோதனை மூலம் அறிதல், பின்னர் அவற்றை நினைவுபடுத்தி பார்த்தல் முதலியவை வாயிலாக கல்வி பெறுகிறார்கள். பெற்ற தகவலை பகுத்தறிதல், புதியவற்றை நினைவு படுத்துதல் என கற்பவர் புலன் அளவில் சுறுசுறுப்பாக உள்ளார்.
புலன் வழிக் கல்வி குறியீடுகள், எண் மதிப்புகள், கொள்கைகள் மற்றும் கோட்பாடுகள் உள்ளிட்ட பலதரப்பட்ட கலாச்சாரக் கூறுகளை உருவாக்கி அவற்றை மாணவர்களுக்கு அளிக்கிறது. இவ்வகை பகுத்துணர்ந்து கற்றல் மனிதர்களிடம் மட்டுமே நிகழ்வதல்ல. பிற விலங்கினங்களும் காட்சி வழியே இவற்றைப் பெறுகின்றன. விலங்குகள் காப்பகத்தில் ஒரு குரங்கு மனிதனைப் போலவோ பிற குரங்கைப் போலவோ செய்வதை நாம் காணலாம்.

கற்பித்தல் மற்றும் கற்றல் வழிமுறைகள்

6E+எஸ் மாடல்
இந்த 6E+எஸ் திட்டம் (ஈடுபாடு, ஆராய்ந்து அறிதல், விளக்கமளித்தல்,  விவரித்தல், மதிப்பிடல், விரிவாக்குதல் மற்றும் தரம்) அமைப்பு சார்ந்த கல்விமுறை அடிப்படையில் கல்வியியல் பேராசியர்களின் ஆலோசனைகளைப் பெற்று உருவாக்கப்பட்டுள்ளது. அமைப்பு சார்ந்த முறையில்  கல்விக்கான பாடத்திட்டமும் செயல் முறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் தாம் ஏற்கனவே பெற்ற கல்வியுடன் மேலும் பல புதிய தகவல்களை மாணவர்கள் அறிந்துகொள்கின்றனர்.
இந்த ஒவ்வொன்றும் கற்றலின் ஒவ்வொரு கட்டத்தைக் குறிப்பிடுகிறது. இவை அனைத்தும் ஆசிரியர் மற்றும் மாணவர் இருவரும் ஈடுபடும் பொதுவான செயலைக் குறிக்கிறது. முன்பு பெற்ற அறிவை பயன்படுத்தவும், அதை மேம்படுத்தவும், புதியவற்றைக் கற்றுகொள்ளவும் அதனை தொடர்ந்து மதிப்பீட்டுக்கு உட்படுத்துதலும் இங்கு நிகழ்கிறது.
ஈடுபடுதல்
'ஈடுபடும்' செயல் முன்பு கற்றவைக்கும், இன்று கற்கப்போவதற்கும் தொடர்பு ஏற்படுத்த வேண்டும்; புதிய செயல்களை உருவாக்க வேண்டும்; மாணவர்களின் சிந்தனைகள் செயல்முடிவுகளை குறித்து இருக்குமாறு செய்ய வேண்டும். மனதளவில் அவர்கள் பாடத்திலும், செயல்முறையிலும் அல்லது பயிற்றுவிக்கப்படும் திறனில் முழுவதுமாக ஈடுபட்டிருப்பர். ஒவ்வொரு பாடமும் சிந்தனையைத் தூண்டும் ஒரு முக்கியமான கேள்வியைக் கொண்டிருக்கும். ஆராய்ந்து அறிதல் பகுதியில் உள்ளவற்றை அறியும் வண்ணம் சில கேள்விகள் இடம் பெற்றிருக்கும்.
ஆராய்ந்து அறிதல்
இந்த கட்டத்தில் மாணவர்கள் பாடத்தை ஆழமாகப் படிக்கின்றனர். இங்கு அதிக வழிகாட்டுதல்களின்றி பாட புத்தகங்களை அவர்களாகவே படித்தறியும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்களுக்கு சில வழிகாட்டுதல்கள் தேவைப்படும். ஆசிரியர்கள் சுழற்சி முறையில் சில முக்கியமான கேள்விகளைக் கேட்டு அவர்களின் உரையாடல்களை கவனித்து அவர்கள் எவ்வளவு படித்திருக்கிறார்கள் என்பதை அறியலாம்.
விளக்கமளித்தல்
இக்கட்டத்தில் மாணவர்கள் தாங்கள் கற்றவற்றை விளக்கிக் கூற உதவுகிறது. தாம் புரிந்துகொண்டதை வார்த்தைகளில் விளக்கிக் கூறவோ அல்லது தங்களின் திறமைகளை வெளிக்காட்டவோ வாய்ப்பு அமைகிறது. இக்கட்டத்தில் ஆசிரியர்களுக்கும் புதிய கலைச்சொற்கள், வரையறைகளைக் குறிப்பிடவும் திறன்களையும் பண்புகளையும் விளக்கவும் வாய்ப்பு கிடைக்கிறது.
விவரித்தல்
இங்குதான் மாணவர்கள் ஒரு பயிற்சியில் நேரடியாக ஈடுபடுகிறார்கள். தாம் புதிதாக கற்றுக்கொண்டவற்றைப் பயன்படுத்தவும் அதில் தான் பெற்ற அனுபவங்களையும் சோதனை முடிவுகளை பிறரிடம் பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கிறது. மாணவர்கள் தங்களின் பரிசோதனை முடிவுகளை மதிப்பீட்டுக்கு வைக்கவும், முடிவுகளை சமர்ப்பிக்கவும் செய்கிறார்கள்.
மதிப்பிடுதல்
மாணவர்களுக்கு கல்வி சென்று சேர்ந்திருக்கிறதா என்று ஆசிரியர்கள் ஆண்டு முழுவதும் மதிப்பிடுகிறார். இக்கட்டத்தில் மாணவர்கள் சுய மதிப்பீடு, குழு மதிப்பீடு செய்யவும் மற்றும் மதிப்பீட்டு வழிமுறைகளையும் சாதனங்களையும் உருவாக்கவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
விரிவாக்குதல்
இப்பகுதியில் பாடதிட்டத்திற்கு வெளியே உள்ளவற்றை அறிந்து கொள்ள சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தாம் கற்றுக்கொண்டவற்றை பல புதிய விசயங்களுக்கும் புதிய சூழலுக்கும் பயன்படுத்த உதவுகிறது. எனினும் இச்செயல் மாணவர்களின் உற்சாகத்தால் விளைவதாகும். இது முழுக்க முழுக்க மாணவர்கள் தாங்களாகவே செய்யும் செயல். எனினும் ஆசிரியர்கள் சில ஆலோசனைகள் வழங்கலாம்.
தரங்கள்
ஒவ்வொரு பாடத்திட்டம் வாரியாக தரம் நிர்ணயிக்கப்பட்டு வரப்படுகிறது. தரம் நிர்ணயம் தேசிய, மாநில அல்லது பகுதிவாரியான தரத்திற்கு ஏற்ப அமைக்கப்படுகிறது. இது பள்ளி அல்லது வட்டார அளவில் பாடத்திட்டதில் என்னென்ன பாடங்கள் சேர்க்கவேண்டும் என்று குறிப்பிடுகிறது மற்றும் ஆசிரியர்களுக்கு கற்பித்தலுக்கான வழிமுறைகளை அளிக்கிறது.

மற்றவர்களைப்போல் உருவகப்படுத்தி நடித்தல்
கலந்துரையாடல் : கற்பித்தல் முறையின் ஒரு பகுதியான உருவகப்படுத்தி நடித்தல் மூலம் மாணவர்களுக்கு அதிக பலன் கிட்டும் (உதாரணமாக பகத்சிங் போல பாவனை செய்து கருத்துக்களை விளக்குதல்). இந்த முறையை சிறப்பாக செயல் படுத்த முழுமையான தயாரிப்பு திட்ட வரையறை, நிர்ணயிக்கப்பட்ட இலக்கு மற்றும் பயிற்சிக்குப் பின் விளக்கிக் கூற கால அவகாசம் ஆகிய அனைத்தும் மிக அவசியம். இதன் மூலம் மாணவர்களின் சமயோஜித அறிவு மற்றும் குழு வழிகற்றல் ஊக்குவிக்கப்படுகிறது. இப்பயிற்சி மாணவர்கள் பலவித தகவல்களில் தெளிவு பெறவும் தான் படித்தவற்றிலிருந்து அன்றாட வாழ்வில் நடப்பவற்றை ஒப்பிட்டு பார்க்கவும் வழி செய்கிறது.

பல்வேறு வயது உடைய மாணவர்கள் கொண்ட வகுப்பில் கற்பித்தல்

பல வயது மாணவர்கள் கொண்ட வகுப்பில் கற்பித்தல் கற்போரின் பன்முகத்தன்மையை அடிப்படையாகக் கொண்டு நிகழ்கிறது. பாடங்கள் ஒவ்வொரு தலைப்பு வாரியாக பல்வேறு தரத்தில் அமைக்கப்பட்டு ஒவ்வொரு தரத்திற்கு தனித்தனி பயிற்சி வினாக்கள் கொடுக்கப்பட்டிருக்கும். மாணவர்கள் தங்களுக்குள் உதவி செய்ய ஊக்கப்படுத்தப்படுகிறார்கள். ஒவ்வொருவரின் வயதிற்கேற்ப உள்ள திறன்களை அறிந்து கொள்ள முடிகிறது  இந்த கூட்டு முயற்சியில் மூத்த மாணவர்கள் இளைய மாணவர்களுக்கு ரோல்-மாடல்களாகவும் (முன் மாதிரி) வழிகாட்டியாகவும் இருக்கிறார்கள்.
இவ்வகை வகுப்புகளில் பல்வகையான கற்பித்தல் முறைகளையும் மதிப்பீட்டு முறைகளையும் கையாளலாம். குழு அமைப்பதில் கடுமையான விதிமுறைகளில் தளர்வு, தனிப்பட்ட கற்றல் முறைகள், அனைவரின் பங்களிப்பு, பிறரை மதித்து நடத்தல் எனப் பல்வேறு வகையில் பயனுள்ளதாக உள்ளது.
குழுவழிக் கற்றல்
குழுவழிக் கற்றல் முறைதான் பிற முறைகளைக் காட்டிலும்  அதிக அளவில் ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் குழுவாக செயல்படும் வாய்ப்பு, வேகமாகவும் செம்மையாகவும் கற்றுக்கொள்ளல், அதிகம் தக்கவைத்துக்கொள்ளும் திறன், கல்வி பயில்தல் பற்றி நேர்மறையான எண்ணம் கொண்டுள்ளார்கள் என முடிவுகள் தெரிவிக்கின்றன.  மாணவர்களை குழுக்களாக அமைத்து ஒரு செயலை முடிக்குமாறு பணித்தல் மட்டுமே இம்முறையில் நிகழ்வதில்லை. இம்முறையில் வெற்றி அடைய குறிப்பிட்ட வழிமுறைகள் பல உள்ளன. மாணவர்களும் ஆசிரியர்களும் அவற்றை அறிந்திருத்தல் அவசியம். சமீபத்தில் இம்முறை தவறாக பயன்படுத்தப்படுவது குறித்து பல புகார்கள் வந்துள்ளன. மாணவர்கள் குழுவாக செயல்படும்போது ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்துதல் உள்ளிட்ட பிற வேலைகளில் ஈடுபடுதல் கூடாது. நன்கு படிக்கும் மாணவர்கள் தொடர்ந்து குழுத்தலைவனாக நியமித்து அவற்றை கவனிக்க பணிக்கப்படுவதால் அவர்களுக்கு இத்திட்டம் ஏற்றதல்ல. இன்று பணியிடங்களில் அதிக எதிர்பார்க்கப்படும் பிறருடன் இணைந்து செயல்படுதல், கூட்டாக செயல்படுதல் முதலிய குணங்களை வளர்த்துக் கொள்ள வாய்ப்பாக அமைகிறது. ரிப்போர்ட்டர், பதிவுசெய்பவர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பளார் முதலிய பல்வேறு பாத்திரங்களில் பணி செய்ய குழுவழிக் கற்றல் வாய்ப்பளிக்கிறது. குழுவில் ஒவ்வொருவரும் ஈடுபட வேண்டும்; அவர்களுக்குத் தனித்தனி பணிகள் உள்ளன. யாரும் இதில் கலந்து கொள்ளாமல் இருந்துவிட முடியாது. ஒரு குழுவின் வெற்றி ஒவ்வொரு தனிநபரின் உழைப்பில்தான் உள்ளது
மாணவர்கள் கல்வி தொடர்பான பணிகளில் சிறுசிறு குழுக்களாக செயல்படுவது அவர்களுக்கும் தங்கள் குழு நண்பர்களுக்கும் உதவியாக இருக்கிறது. குழுவழிக் கற்றல் முறை கீழ்க்கண்ட ஐந்து பண்புகளைக் கொண்டுள்ளது.
  • குழுவாக செயல்படுவதன் மூலம் சிறப்பாக செய்யக்கூடிய செயல்களை மாணவர்கள் குழுக்களாக இணைந்து செய்து முடிக்கிறார்கள்.
  • இரண்டு முதல் ஐந்து நபர்கள் கொண்ட குழுவாக செயல்படுகிறார்கள்.
  • பொதுவான பணிகளை  செய்து முடிக்க தங்களின் கூட்டுறவு மற்றும் சமுதாய குணங்களைப் பயன்படுத்துகிறார்கள்.
  • ஒவ்வொருவரும் குழுவின் மற்ற உறுப்பினர்களை சார்ந்திருக்கின்றனர். செயல்திட்டம் அதற்கு ஏற்றது போல் அமைக்கப்பட்டிருக்கும்.
  • ஒவ்வொரு மாணவனுக்கும் தன் செயலில் முழு பொறுப்பு உண்டு.

கற்கும் முறைகள்
கற்கும் முறைகள் என்பது கல்வி கற்க பயன்படுத்தும் வெவ்வேறு வகையான உத்திகள் மற்றும் செயல்முறைகள் ஆகும்

கற்கும் முறைகள் என்ன?

காட்சி வழி கற்போர் : காட்சி வழி கற்றல்
இவ்வகை கற்போர் ஆசிரியரின் உடலசைவு மொழிகள் மற்றும் முகபாவனைகளைக் காணும்போதுதான் பாடத்தினை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். கவனிக்கும்போது எதுவும் கண்ணை மறைக்காமல் இருக்க இவர்கள் வகுப்பறையில் முன் வரிசையில் அமர விரும்புவர். இவ்வகை கற்போர்கள் காட்சி வழியாகவே சிந்திக்கிறார்கள். படங்கள், சார்ட்டுகள், படங்களுடன் கூடிய பாடப்புத்தகங்கள், வீடியோ மற்றும் கையடக்க குறிப்புகள் மூலம் நன்றாக புரிந்துகொள்வர். வகுப்பில் பாடம் நடத்தும்போதோ ஆசிரியர் கலந்துரையாடும்போதோ இவ்வகை கற்போர் முழுதும் குறிப்பு எடுக்க விரும்புவர்.
கேட்டல் வழி கற்போர் : செவி வழி கற்றல்
இவ்வகைக் கற்போர் லெக்ச்சர்கள், கலந்துரையாடல்கள், பாடத்தில் உள்ளவற்றைப் பற்றி பிறரிடம் விவாதித்தல் மற்றும் அவர்களின் கருத்துகளைக் கேட்டல் மூலம் சிறப்பாகப் பயில்வர். சொற்களில் பொதிந்திருக்கும் பொருளை ஆசிரியர் குரலின் பேச்சு சுருதி, வேகம் முதலியவற்றைக் கொண்டு அறிய முற்படுவர். இவர்களைப் பொறுத்தவரையில் எழுத்து வடிவில் உள்ளதைக் காட்டிலும் பேச்சு வடிவில் உள்ளது அதிக பயன்தரும். பாடத்தை சத்தமாகப் படிப்பதும்  டேப் ரெக்கார்டர் மூலம் பாடத்தினை கேட்பதும் அதிக பயன்தரும்.
உடல் அசைவு / தொடுதல் வழி:  அசைவுகள், தொடுதல் வழி கற்றல்.
இவ்வகை கற்போர் சுற்றுப்புற உலகில் உள்ளதை தாங்கள் நேரில் அறிந்து, ஆராய்ந்து கற்க விரும்புவர். ஒரே இடத்தில் அதிக நேரம் இருக்க மாட்டார்கள். ஆராய்ச்சி செய்யும் எண்ணம் அவர்களின் கவனத்தை அடிக்கடி சிதைக்கும்.

Tuesday, January 23, 2018

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் ஸகாத் விநியோக நிகழ்வுகள்



    அண்மையில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் கூட்டு ஸகாத் விநியோகப்பிரிவினரின் ஒன்று கூடல் இடம் பெற்றது. காத்தான்குடி ஸகாத் விநியோக நடவடிக்கையினை கூட்டு ஸகாத் பிரிவினர் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளத்தின்  வழிகாட்டலோடு கடந்த பல வருடங்களாக இதனை மேற்கொண்டு வருகின்றனர்.
 இதன் காரணமாக அதிக பயனாளிகள் கடந்த பல வருடங்களாக இப்பிரதேசத்தில் சிறப்பான நன்மைகளை அடைந்துள்ளனர்.
 பல முஸ்லிம் கிராமங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கின்ற இந்நடவடிக்கையானது. இப்பிரதேசத்தில் அனைவரினதும் வரவேற்பைப் பெற்று வெற்றியளித்துள்ளது.
 இதன் தலைவர், செயலாளர் ஏனைய உறுப்பினர்கள் இங்கு சமூகமளித்திருப்பதோடு, பயனாளிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.
   இந்நிகழ்வின் போது மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் இஸ்லாம் பாட ஆசிரிய ஆலோசகர் அப்துர் கபூர் மௌலவி அவர்கள் உரையாற்றுகின்றார்கள்.


Sunday, January 21, 2018

பூக்கள் உலகு புவியில் தோன்றிய வரலாறு எவ்வாறு? அறிந்தனர் ஆராய்ச்சியாளர்கள்

அறிவியல் அறிஞர் சார்லஸ் டார்வினையே குழம்ப வைத்த கேள்வி ஒன்றுக்கான பதிலை அறிவியல் ஆய்வாளர்கள் தற்போது கண்டறிந்துள்ளதாக நம்புகின்றனர். பூக்கள் எப்படித் தோன்றியது மற்றும் பூக்கும் தாவரங்கள் பூமி முழுவதும் எவ்வாறு பரவின என்பதே அந்தக் கேள்வி.


 பூக்கள் பூக்கும் தன்மை உடைய தாவரங்கள் (Angiosperms) உலகில் உள்ள தாவர வகைகளில் 90% உள்ளன. பெரும்பாலான உணவுப் பொருட்களை வழங்கும் தாவரங்களும் அவற்றுள் அடக்கம்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, தங்களை உணவாகக் கொண்ட முள் செடிகளை விஞ்சி பூக்கும் தாவரங்கள் வேகமாகப் பரவின. ஆனால், அது எவ்வாறு நிகழ்ந்தது என்பதும் ஒரு புதிராகவே இருந்தது.

ஜீனோம் எனப்படும் மரபணுத்தொகைகளை (Genome) உருவத்தில் சிறியதாக சுருக்கிக்கொண்டதன் மூலமே அவை வேகமாகப் பூமியெங்கும் பரவின என்பது இப்போது தெளிவாகியுள்ளது.
"உயிரணுவின் உருவ அளவை குறைத்தாலும் வாழத் தேவையான குணாதிசயங்களை எப்படி அதில் அடக்கி இருக்க முடியும் எனும் கேள்வி எழுகிறது," என்கிறார் அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோ ஸ்டேட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த கெவின் சிமோனனின்.
பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி முள் செடிகளாலும், ஊசியிலை தாவரங்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. சுமார் 15 கோடி ஆண்டுகளுக்கு முன்பு முதல் பூக்கள் பூக்கும் தாவரங்கள் தோன்றின.

அவை வேகமாகப் பரவி ஒரே பச்சை நிறமாக இருந்த பூமிக்கு பல்வேறு நிறங்களைத் தந்தன. அவை வெற்றிகரமாக வேகமாகப் பரவியதற்கான காரணம் சில நூற்றாண்டுகளாகவே விவாதிக்கப்பட்டு வந்தது. சார்லஸ் டார்வின் அதை 'வெறுக்கத்தக்க புதிர்' என்று கூறியுள்ளார்.



சிமினோன் மற்றும் அவரது சக ஆராய்ச்சியாளரான ஏல் பல்கலைக்கழகத்தை சேர்ந்தஆடம் ரோடி தாவரங்களின் மரபணுத்தொகையின் உருவ அளவுக்கும் இதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ என்று நினைத்தனர். அவர்கள் பலநூறு தாவரங்களின்மரபணுக்களின் உருவ அளவை ஆய்வு செய்தனர்.

மரபணுத்தொகையின் உருவ அளவையும் தாவரங்களின் உடல் கூற்றையும் அவர்கள் ஒப்பிட்டனர். அப்போது மரபணுத்தொகையின் உருவ அளவை தாவரங்கள் சிறிதாக்கிக் கொண்டதற்கும், பூக்கும் தாவரங்கள் வேகமாக உலகில் பரவியதற்கும் தொடர்பு உள்ளதற்கான ஆதாரங்கள் இதன்மூலம் கிடைத்தது.

உயிரணுக்களின் கருவில் உள்ள மரபணுத்தொகையின் அளவை சுருக்கியதன் மூலம் பூக்கும் தாவரங்களால் சிறிய உயிரணுக்களை உருவாக்க முடிந்தது. இது பூக்கள் பூக்கும் தாவரங்கள் (Angiosperms)-இல் மட்டுமே நடந்தது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Saturday, January 20, 2018


வலய மட்ட வெளிவாரி மதிப்பீட்டு நடவடிக்கை




18.01.2018அன்று மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி பாடசாலைகளுக்கிடையிலான கோட்டமட்ட மதிப்பீட்டு நடவடிக்கை மட்/மம/நூறாணியா வித்தியாலயத்திற்கும், காத்தான்குடி மட்/மம/ஹிழுரிய்யா வித்தியாலயத்திற்கும் நடை பெற்றது. இதனை வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.ஏ.எஸ்.இஸ்ஸதீன் அவர்கள்  வழிநடாத்தியதோடு, ஏனைய உதவிக்கல்விப்பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள்,  ஆகியோர் இம்மேற்பார்வை நடவடிக்கையில் இணைந்துகொண்டனர்.

  இதில் வலயக்கல்விப் பணிபாளர், மற்றும் பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஆகியோரால் பாடசாலையின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கையினை சிறப்பான முறையில் மேற்கொள்வதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை தமது பாடசாலையில் வழங்க வேண்டும் என்ற கருத்துக்கள் ஆசிரியர்களுக்கு முன்வைக்கப்பட்டன.

மேலும் கடந்த கால அதிபர் அவர்களின் கால எல்லையில் நடைபெற்ற வலயமட்ட வெளிவாரி மதிப்பீட்டின் போது 48 புள்ளிகளையே ஹிழுரிய்யா வித்தியாலயம் பெற்றிருந்தமையோடு, இம்முறை அதிலிருந்து முன்னேற்றம் கண்டு 68 புள்ளிகளைப் பெற்று சிறப்படைந்துள்ளது.

வலயக்கல்விப் பணிப்பாளர், பிரிதிக்கல்விப்பணிப்பாளர்கள், கோட்டக்கல்விப்பணிப்பாளர் , உதவிக்கல்விப்பணிப்பாளர், ஏனயே ஆசிரிய ஆலோசகர்களின் பாராட்டினை  இது அதிபர் அவர்களுக்கு பெற்றுக்கொடுத்துள்ளது. அதிபர் எஸ்.ஐ.யாஸிர் அறபாத்தின் குறுகிய காலத்தினுள் பெற்றுள்ள இந்த வளர்ச்சியானது அனைவரினாலும் பாராட்டுக்குரியதொரு விடயமாகும்

இதனால் இப்பாடசாலையின் பெற்றார்கள், மாணவர்கள், நிருவாக உறுப்பினர்கள் அனைவரும் பெருமையடைகின்றனர்.



  

Friday, January 19, 2018

தரம் 01 தாருஸ்ஸலாம் வித்தியால மாணவர்களை வரவேற்கும் நிகழ்வுகள்


அண்மையில் நாடளாவிய ரீதியில் தரம் ஒன்று மாணவர்களை பாடசாலைகளில் வரவேற்கும் நிகழ்வுகள் நடைபெற்றன. மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கோட்டப்பாடசாலையான தாருஸ்ஸலாம் வித்தியாலயத்தில் அப்பாடசாலையின் அதிபர்ஏ.எல்.முனீர் அஹமட் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வானது இடம்பெற்றது.

இப்பாடசாலையின் வலயமட்ட இணைப்பாளரான (PSI) ஏ.எம்.றபீக் (விஞ்ஞானப் பாட ஆசிரிய ஆலோசகர்)  மற்றும் கவிமணி எம்.எச்.எம்.புஹாரி பலாஹி, மௌலவி முஸ்தபா பலாஹி ஆகியோர், அதிதிகளாக  வரவேற்கப்படுவதனையும், அதிதிகளினால்  ஆற்றப்பட்ட உரைகளை மாணவர்கள் , பெற்றோர்  செவிமடுப்பதனையும் நாம்  இங்கு காணலாம். 

Thursday, January 18, 2018

ஏறாவூர் கிட்ஸ் கொலிஜின் வருடாந்த பட்டமளிப்பு விழாவும், பரிசளிப்பு நிகழ்வும்




        அண்மையில் ஏறாவூர் கிட்ஸ் கொலிஜின் முன்பள்ளி சிறுவர்களுக்கான வருடாந்த பரிசளிப்பு விழா இடம்பெற்றது. இதன் தலைவராக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கணிதப்பாட ஆசிரிய ஆலோசகரான திரு.எம்.எல்.பதியுத்தீன் அவர்கள் செயற்படுகின்றார். இந்நிகழ்வில் கலந்துகொண்ட மாணவ, மாணவியருக்கு பரிசில்களும் , பட்டமளிப்பும் வழங்கி கௌரவிக்கப்படுகின்றனர். முன்பள்ளி பிரதிக்கல்விப் பணிப்பாளர் திரு.எஸ்.ஏ.சி.கலீலுர் ரஹ்மான் அவர்களும் சிறப்பு அதிதியாக இந்நிகழ்வில் கலந்துகொண்டார்கள். மேலும் விசேட அதிதிகளும், ஊர் பிரமுகர்களும் இதில் கலந்து சிறப்பித்தனர்.


   ஏறாவூர் பிரதேசத்தில் மிகவும் சிறப்பாக இயங்கும் இந்த முன்பள்ளியானது. குவைட் நாட்டின் வழிகாட்டலோடு இப்பிரதேசத்தில் இயங்கிக்கொண்டிருப்பது இதன் சிறப்பம்சமாகும்.

வலய மட்ட மதிப்பீடு - 2018






  18.01.2018அன்று மட்டகளப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி பாடசாலைகளுக்கிடையிலான கோட்டமட்ட மதிப்பீட்டு நடடிவக்கை மட்/மம/நூறாணியா வித்தியாலயத்திற்கும், காத்தான்குடி மட்/மம/ஹிழுரிய்யா வித்தியாலயத்திற்கும் நடை பெற்றது. இதில் நூறாணியா வித்தியாலயத்திற்கு கல்வி அபிவிருத்திக்குப் பொறுப்பாளரான திருமதி.எம்.ஏ.றிஸ்மியா பானூ அவர்கள் இணைப்பாளராக செயற்பட்டு இப்பாடசாலையின் மேற்பார்வையினை வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.ஏ.எஸ்.இஸ்ஸதீன் அவர்களின் வழிகாட்டலில் வழிநடாத்தியதோடு, ஏனைய உதவிக்கல்விப்பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரிய மத்திய நிலைய தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் ஆகியோர் இம்மேற்பார்வை நடவடிக்கையில் இணைந்துகொண்டனர்.

  இதில் வலயக்கல்விப் பணிபாளர், மற்றும் பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஆகியோரால் பாடசாலையின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கையினை சிறப்பான முறையில் மேற்கொள்வதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை தமது பாடசாலையில் வழங்க வேண்டும் என்ற கருத்துக்கள் ஆசிரியர்களுக்கு முன்வைக்கப்பட்டன.

  நூறாணியா வித்தியால அதிபர் எம்.ஏ.சி.எம்.நியாஸ் அவர்கள் தமது பாடசாலையின் நிலை பற்றிய விளக்கத்தினையும்  இதன் போது  விபரித்தார்.

  தேசிய கல்வி நிறுவகத்தின் பாரம்பரிய மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் ஊடாக அரபு மொழிப் பாடத்திற்கான மொடியூல் தயாரிக்கும் செயற்திட்டத்திட...