Thursday, January 18, 2018

வலய மட்ட மதிப்பீடு - 2018






  18.01.2018அன்று மட்டகளப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி பாடசாலைகளுக்கிடையிலான கோட்டமட்ட மதிப்பீட்டு நடடிவக்கை மட்/மம/நூறாணியா வித்தியாலயத்திற்கும், காத்தான்குடி மட்/மம/ஹிழுரிய்யா வித்தியாலயத்திற்கும் நடை பெற்றது. இதில் நூறாணியா வித்தியாலயத்திற்கு கல்வி அபிவிருத்திக்குப் பொறுப்பாளரான திருமதி.எம்.ஏ.றிஸ்மியா பானூ அவர்கள் இணைப்பாளராக செயற்பட்டு இப்பாடசாலையின் மேற்பார்வையினை வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.ஏ.எஸ்.இஸ்ஸதீன் அவர்களின் வழிகாட்டலில் வழிநடாத்தியதோடு, ஏனைய உதவிக்கல்விப்பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரிய மத்திய நிலைய தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் ஆகியோர் இம்மேற்பார்வை நடவடிக்கையில் இணைந்துகொண்டனர்.

  இதில் வலயக்கல்விப் பணிபாளர், மற்றும் பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஆகியோரால் பாடசாலையின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கையினை சிறப்பான முறையில் மேற்கொள்வதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை தமது பாடசாலையில் வழங்க வேண்டும் என்ற கருத்துக்கள் ஆசிரியர்களுக்கு முன்வைக்கப்பட்டன.

  நூறாணியா வித்தியால அதிபர் எம்.ஏ.சி.எம்.நியாஸ் அவர்கள் தமது பாடசாலையின் நிலை பற்றிய விளக்கத்தினையும்  இதன் போது  விபரித்தார்.

No comments:

Post a Comment

  தேசிய கல்வி நிறுவகத்தின் பாரம்பரிய மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் ஊடாக அரபு மொழிப் பாடத்திற்கான மொடியூல் தயாரிக்கும் செயற்திட்டத்திட...