ஏறாவூர் கிட்ஸ் கொலிஜின் வருடாந்த பட்டமளிப்பு விழாவும், பரிசளிப்பு நிகழ்வும்
அண்மையில் ஏறாவூர் கிட்ஸ் கொலிஜின் முன்பள்ளி
சிறுவர்களுக்கான வருடாந்த பரிசளிப்பு விழா இடம்பெற்றது. இதன் தலைவராக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கணிதப்பாட ஆசிரிய ஆலோசகரான
திரு.எம்.எல்.பதியுத்தீன் அவர்கள் செயற்படுகின்றார். இந்நிகழ்வில் கலந்துகொண்ட
மாணவ, மாணவியருக்கு பரிசில்களும் , பட்டமளிப்பும் வழங்கி கௌரவிக்கப்படுகின்றனர். முன்பள்ளி பிரதிக்கல்விப் பணிப்பாளர் திரு.எஸ்.ஏ.சி.கலீலுர்
ரஹ்மான் அவர்களும் சிறப்பு அதிதியாக இந்நிகழ்வில்
கலந்துகொண்டார்கள். மேலும் விசேட அதிதிகளும், ஊர் பிரமுகர்களும் இதில் கலந்து சிறப்பித்தனர்.
ஏறாவூர் பிரதேசத்தில் மிகவும் சிறப்பாக இயங்கும் இந்த முன்பள்ளியானது. குவைட் நாட்டின் வழிகாட்டலோடு இப்பிரதேசத்தில் இயங்கிக்கொண்டிருப்பது இதன் சிறப்பம்சமாகும்.
ஏறாவூர் பிரதேசத்தில் மிகவும் சிறப்பாக இயங்கும் இந்த முன்பள்ளியானது. குவைட் நாட்டின் வழிகாட்டலோடு இப்பிரதேசத்தில் இயங்கிக்கொண்டிருப்பது இதன் சிறப்பம்சமாகும்.
No comments:
Post a Comment