மட்டக்களப்பு மத்தி வலயத்தின் மாகாண மட்ட தற்போதைய முடிவுகள் 17.07.2019
இதுவரை நடந்து முடிந்த மாகாண மட்ட விளையாட்டுப்போட்டிகளின் சில முடிவுகள் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. அதற்கேற்ப 16 போட்டிகளில் மட்டக்களப்பு மத்தி வலயம் வெற்றியீட்டியுள்ளது. இதில் 14 நிலைகளினை ஏறாவூர் கோட்டமும், 02 நிலைகளினை காத்தான்குடி கோட்டமும் பெற்றுள்ளது. எனவே இந்நிலைகளைப் பெறுவதற்கு மாணவர்களை தயார் படுத்திய அதிபர்கள், ஆசிரியர்கள் , விளையாட்டுத்துறை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை வலயம் சார்பாக வலயக் கல்விப்பணிப்பாளர் திரு.எஸ்.எம்.எம்.எஸ்.டொக்டர் உமர் மௌலான (SLEAS), ஏறாவூர் கோட்டக் கல்விப்பணிப்பாளர் திரு. டி.எம்.எம்.அஹமட் (SLEAS) அவர்களும் மற்றும் ஏனைய கோட்டக்கல்விப் பணிப்பாளர்களும் பாராட்டுகின்றனர்.
இதிலும் குறிப்பாக ஏறாவூர் கோட்டக்கல்விப்பணிப்பாளர் அவர்கள் தமது கோட்டம் 14 நிலைகளினைப் பெறுவதற்கு அயராது உழைத்த அனைத்து அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதில் பங்கேற்று வெற்றிகளைப் பெற்றுத்தந்த மாணவர்களையும் வாழ்த்துகின்றார்கள்.
தவகல் :- பிரதேசக்கல்விப்பணிப்பாளர்- ஏறாவூர்.
No comments:
Post a Comment